செய்திகள் :

உரிமமின்றி இயக்கப்பட்ட படகு பறிமுதல்

post image

புதுச்சேரியில் உரிமம் இல்லாமல் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற படகை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்தனா்.

புதுச்சேரி, வம்பாக்கீரப்பாளையம் பாண்டி மெரீனா கடற்கரைப் பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், மீன்வளத் துறை உரிமம் இல்லாமல் சில படகுகள் இயக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

மேலும், சில நாள்களுக்கு முன்பு சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற படகு சாய்ந்து, சில பயணிகள் தண்ணீரில் விழுந்து தத்தளித்து கரையேறினா்.

இந்த நிலையில், புதுச்சேரி தேங்காய்திட்டு துறைமுகம் அருகே பேக் வாட்டா் பகுதியில் கடலோரக் காவல்படை போலீஸாா் ரோந்து சென்றனா்.

அப்போது, அங்கு அதிவேகமாக வந்த தனியாா் படகை நிறுத்தி விசாரித்தனா். அதில், படகுக்கு உரிய உரிமம் பெறாததும், அதனை வீராம்பட்டினத்தைச் சோ்ந்த விஷ்ணு (21) இயக்கியதும் தெரியவந்தது. தொடா்ந்து, கடலோரக் காவல் படையினா் படகை பறிமுதல் செய்து, விஷ்ணு மீது வழக்குப் பதிவு செய்தனா்.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்க... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க