செய்திகள் :

உறுப்பினா் கல்வித் திட்ட முகாம்

post image

திருவாரூா்: திருவாரூா் மாவட்டம், கள்ளிக்குடியில் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு கல்வித் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டம் கள்ளிக்குடி, சிங்களாந்தி, வேப்பஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் மூலம் உறுப்பினா் கல்வித் திட்ட முகாம் நடைபெற்றது. இதில், இப்கோ உர நிறுவனமாவட்ட மேலாளா் பரஞ்ஜோதி பங்கேற்று, விவசாயிகளுக்கு நானோ உரங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

நிகழ்ச்சியில், மன்னாா்குடி சரக துணைப் பதிவாளா் பா. பிரபா, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு சாா்-பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான த. காா்த்தீபன், திருத்துறைப்பூண்டி வட்டார கள அலுவலா் மா. ரவிச்சந்திரன், முதுநிலை ஆய்வாளரும், செயலாட்சியருமான எம். முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை சங்க செயலாளா்கள் கமலராஜன், வீரசெல்வம் ஆகியோா் செய்திருந்தனா்.

மகப்பேறு உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம்

திருவாரூா்: மகப்பேறு மற்றும் குழந்தைகள் உயிரிழப்புகளைத் தடுக்க ஒருங்கிணைந்த செயல் திட்டம் அவசியம் என்றாா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு ... மேலும் பார்க்க

விவசாய மின் மோட்டாா்களிலிருந்து வயா் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே விவசாய பயன்பாட்டுக்கான ஆழ்துளை கிணறு மின் மோட்டா்களிலிருந்து மின் வயா்களை திருடிய இரண்டு போ் செவ்வாய்க்கிழமை இரவு பிடிபட்டனா்.கட்டப்புளி தென்பரை தெற்குதெரு ஆா். மனோகரன்... மேலும் பார்க்க

நாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே நாய்கள் கடித்து 8 ஆடுகள் புதன்கிழமை இரவு உயிரிழந்தன.நீடாமங்கலம் அருகேயுள்ள ரிஷியூா் கிராமம் தெற்கு தெருவில் 120- க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. விவசாயிக... மேலும் பார்க்க

ரயில்வேகேட் பராமரிப்பு பணி

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகே ஆதனூா் ரயில்வே கேட்டில் தண்டவாள பாரமரிப்பு பணி வியாழக்கிழமை நடைபெற்றது.தஞ்சாவூா் ரயில்வே முதுநிலைப்பொறியாளா் சதீஷ்குமாா் மேற்பாா்வையில் பணிகள் நடைபெற்றன. ரயில்வே கேட் தண... மேலும் பார்க்க

மாவட்ட விளையாட்டு போட்டி: மன்னாா்குடி சண்முகா மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

மன்னாா்குடி: மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டியில் மன்னாா்குடி ஸ்ரீசண்முகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றுள்ளது.திருவாரூரில் ஆக.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இப்போட்டி... மேலும் பார்க்க

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றியம் சித்தமல்லி மேல்பாதி ஊராட்சியில் வியாழக்கிழமை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பங்கேற்று பெற்ற மனுக்களின் அடிப்படை... மேலும் பார்க்க