செய்திகள் :

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன்: கிளன் பிலிப்ஸ்

post image

உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் என நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கிளன் பிலிப்ஸ் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான கிளன் பிலிப்ஸ் அவரது பிரம்மிக்க வைக்கும் ஃபீல்டிங் திறமையால் அனைவரது கவனத்தையும் ஈர்க்கக்கூடியவர். கிரிக்கெட் திடலில் அவர் பறந்து பிடிக்கும் பல கேட்ச்சுகள் இணையத்தில் மிகவும் வைரலாவது வழக்கம். அண்மையில் நிறைவடைந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரிலும் தனது சூப்பர் மேன் வித்தைகளை ஃபீல்டிங்கில் காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிக்க: நான் இம்பாக்ட் பிளேயர் கிடையாது; என்ன சொல்கிறார் எம்.எஸ்.தோனி?

விமானியாக விரும்பிய கிளன் பிலிப்ஸ்

ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் விளையாடவுள்ள கிளன் பிலிப்ஸ், உலகின் மொத்த பணமும் இருந்திருந்தால் விமானியாக மாறியிருப்பேன் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: விமானியாக வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய கனவு. என்னுடைய இளமைப் பருவத்தில் நான் கிரிக்கெட் விளையாடாமல் உலகின் மொத்த பணமும் என்னிடம் இருந்திருந்தால், நான் அநேகமாக விமானியாக மாறியிருப்பேன். காற்றில் பறக்க வேண்டும் என்பது எனக்கு மிகவும் பிடிக்கும். விமானியாக கடைபிடிக்கும் அனைத்து விஷயங்கள் மீதும் எனக்கு அதீத ஆர்வம் இருந்தது. எனக்கு ஏன் இந்த அளவுக்கு வானில் பறப்பதற்கு பிடிக்கிறது எனத் தெரியவில்லை. ஆனால், வானில் பறப்பவர்களுக்கும் அவர்களுக்கு ஏன் வானில் பறப்பது அவ்வளவு பிடிக்கிறது எனத் தெரியாது என நினைக்கிறேன்.

இதையும் படிக்க:ருதுராஜ் எடுக்கும் முடிவுகளின் பின்னணியில் நான் இருக்கிறேனா? எம்.எஸ்.தோனி கூறியதென்ன?

என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்குப் பிறகு, மலைகளுக்குச் சென்று எனக்கு பிடித்தமான விஷயங்களை செய்வேன். அதில், முதலாவது தெரிவாக விமானத்தை இயக்குவதே இருக்கும். மற்ற விளையாட்டுகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்களது பிரதான துறைக்கு உதவியாக இருக்கும். எனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் கோல்ஃப் விளையாடுவேன். கோல்ஃப் விளையாடும்போது, மனம் மிகவும் அமைதியாக இருக்கும். வில்வித்தையில் ஈடுபடுவதும் எனக்கு மிகவும் பிடிக்கும். மற்ற விளையாட்டுகளில் கற்றுக்கொண்ட விஷயங்கள் கிரிக்கெடில் எனக்கு உதவியது என்றார்.

தென் கொரிய காட்டுத் தீ: நெருப்பில் சடங்கு செய்த நபர் காரணமா?

தென் கொரியாவில் காட்டுத் தீ ஏற்படக் காரணம் எனச் சந்தேகிக்கப்பட்ட நபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தென் கொரியாவின் மிக மோசமான பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்தக் காட்டுத... மேலும் பார்க்க

லெபனான் தலைநகரில் இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல்!

லெபனான் நாட்டு தலைநகரின் மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையிலான போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த 2024 நவம்பர் மாதம் முதல் கடைப்பிடிக்கப்பட்டிருந்த நிலையில் த... மேலும் பார்க்க

துருக்கி மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ! விடியோ வைரல்!

துருக்கியில் நாடு தழுவிய மக்கள் போராட்டத்தில் பிக்காச்சூ வேடமணிந்த ஒருவர் கலந்து கொண்டுள்ளார்.துருக்கி நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு செக் குடியரசு தடை!

செக் குடியரசு நாட்டில் சீனாவின் செயற்கைக்கோள் முதலீட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.சீனாவைச் சேர்ந்த எம்போசாட் என்ற நிறுவனம் கிழக்கு செக்கியா மாகாணத்தின் வல்கோஸ் என்ற கிராமத்தில் செயற்கைக்கோள் டிஷ் பொ... மேலும் பார்க்க

ஊர் ஊராகச் சென்று மக்களைத் தாக்கும் ஒற்றை யானை! ஒரே நாளில் 4 பேர் பலி!

ஜார்க்கண்டு மாநிலத்தில் மதம் பிடித்த ஒற்றை யானையின் தாக்குதலில் 12 மணி நேரத்தில் 4 பேர் பலியாகியுள்ளனர். கும்லா மற்றும் சிம்டேகா ஆகிய மாவட்டங்களில் தனது கூட்டத்தை விட்டு பிரிந்ததாகக் கருதப்படும் காட்ட... மேலும் பார்க்க

திரைப்படம், நாடகம் மூலம் தீவிரவாதத்தை எதிர்க்கும் பாகிஸ்தான்!

தீவிரவாதத்தை திரைப்படங்கள் மற்றும் நாடகங்கள் மூலம் எதிர்க்க பாகிஸ்தான் அரசு திட்டமிட்டுள்ளது. பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களின் பொது மற்றும் ராணுவத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் அந்நாட்டு பிரதமர... மேலும் பார்க்க