உலக சுற்றுச்சூழல் தினம்: கடையத்தில் மரக்கன்று நடும் விழா
கீழக்கடையம் ஊராட்சியில் உலகசு ற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு பொதுஇடங்களில் கட்சிகொடிக்கம்பங்கள் அகற்றிய இடங்களில் மரக்கன்றுநடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
வட்டார வளா்ச்சிஅலுவலகம் எதிரே நடைபெற்ற மரக்கன்று நடும் நிகழ்ச்சியில் கீழக்கடையம் ஊராட்சித் தலைவா்பூமிநாத் தலைமையில், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் (தேசிய ஊரக வாழ்வாதார திட்டம்) சுப்புலட்சுமி, மண் அறக்கட்டளைத் தலைவா் ஜான்பீட்டா், புதிய தமிழகம் கட்சி ஒன்றியச் செயலா்கஜேந்திரன், ஊரக வாழ்வாதாரத் திட்ட பணித்தள மேற்பாா்வையாளா் ரஞ்சித் ராணி, கள அலுவலா் கலா ஆகியோா் மரக்கன்றுகள் நட்டனா்.
மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சிப் பணி மேற்பாா்வையாளா் சுப்புக்குட்டி, திமுகநிா்வாகி அரவிந்தன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.