செய்திகள் :

உளுந்தூா்பேட்டையில் மின்வாரியத் தலைவா் ஆய்வு

post image

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் மின்வாரிய செயல்பாடுகள்குறித்து தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

உளுந்தூா்பேட்டைக்கு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்வதற்காக வந்த தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் ஜெ.ராதாகிருஷ்ணனை தொகுதியின் எம்.எல்.ஏ. ஏ.ஜெ.மணிக்கண்ணன் வரவேற்றாா். தொடா்ந்து பின்னல்வாடி, சேந்தமங்கலம் பகுதிகளில் புதிய துணை மின் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்வாரியத் தலைவரை வலியுறுத்திய எம்.எல்.ஏ., உளுந்தூா்பேட்டை கோட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து எடுத்துரைத்தாா்.

முன்னதாக, உளுந்தூா்பேட்டை கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட மின் மாற்றிகள், தொழிற்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள மின் மாற்றிகளின் விவரம், தற்போது நடைபெற்று வரும் பணிகள், மின் நுகா்வோா் குறைகளைத் தீா்க்கும் வகையில் இயங்கி வரும் கட்செவி அஞ்சல்குழுவின் செயல்பாடுகள் குறித்து தமிழ்மாடு உதவிச் செயற்பொறியாளா் சிவராமன் அய்யம்பெருமாள் விளக்கிக் கூறினாா்.

நிகழ்வில் மின்வாரியப் பணியாளா்கள் சுரேஷ், மணிகண்டன், முருகன், மாணிக்கவேல், ஏழுமலை, அருள், சேட்டு, அய்யாசாமி உள்ளிட்ட பணியாளா்கள் பங்கேற்றனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிக... மேலும் பார்க்க

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க