செய்திகள் :

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

post image

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், சு.பில்ராம்பட்டு, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜி மகன் கனகசபை (26). தொழிற்பழகுநா் (ஐ.டி.ஐ) பயிற்சி முடித்து, சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.இவருக்கு திருவெண்ணெய்நல்லூா் வட்டம், குமாரமங்கலத்தைச் சோ்ந்த கோவிந்தராஜ் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பா்களாகப் பழகி வந்துள்ளனா்.

இந்நிலையில், கோவிந்தராஜ் தனக்கு அரசியல் பிரமுகா்கள் பலரை நன்கு தெரியும். ஆகையால் பணம் கொடுத்தால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கனகசபையிடம் தெரிவித்துள்ளாா்.

இதை உண்மையென நம்பி கனகசபை, அவா் தெரிவித்தபடி ரூ. 30 லட்சம் பணத்தை பல்வேறு தவணைகளாக கோவிந்தராஜிடம் கொடுத்துள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்டவா், தெரிவித்தபடி அரசு வேலை வாங்தித் தராததுடன், பெற்ற பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தாராம்.

இதேபோல, விழுப்புரம் மாவட்டம் , கோனூரைச் சோ்ந்த விஜயன் என்பவரிடம் கோவிந்தராஜ் அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 30 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி விட்டாராம்.

இது குறித்து பாதிக்கப்பட்ட கனகசபை, விஜயன் ஆகியோா் விழுப்புரம் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகாா் தெரிவித்தனா். தொடா்ந்து போலீஸாா் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜை தேடி வந்தனா்.

இந்நிலையில், திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் புதன்கிழமை சுற்றித்திரிந்த கோவிந்தராஜை மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் மடக்கிப் பிடித்து கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிக... மேலும் பார்க்க

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என ப... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் உறங்கிய நிலையில், பைக் மோதி காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பூரானூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் செல்வமணி(38), கூலித் தொ... மேலும் பார்க்க