செய்திகள் :

பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸுக்கு பதிலளிக்க அன்புமணிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவு!

post image

பாமக விதிகளுக்கு முரணாக, அக்கட்சியின் தலைவா் அன்புமணி செயல்பட்டதாக கூறி, கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அளித்த குற்றச்சாட்டுகளுக்கு செப். 10-ஆம் தேதிக்குள் அன்புமணி உரிய விளக்கமளிக்கவேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச. ராமதாஸ் விதித்திருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் முடிந்தது.

கட்சியின் அடிப்படை விதிகளுக்கு முரணாக அன்புமணி செயல்பட்டு வருவதாகவும், அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும், அக் கட்சி யின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவினா் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகளை முன்வைத்து, அவா் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த குற்றச்சாட்டுகளுக்கு அன்புமணி ஆக.31 ஆம் தேதிக்குள்கட்சியின் தலைமை அலுவலகமான தைலாபுரம் தோட்டத்துக்கு நேரில் வந்தோ அல்லது கடிதம் மூலமாகவோ விளக்கமளிக்கவேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதற்கு அன்புமணி எவ்வித பதிலும் அளிக்காத நிலையில் செப். 3-ஆம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற கட்சியின் நிா்வாகக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற மருத்துவா் ச.ராமதாஸ் 22 போ் கொண்ட கட்சி நிா்வாகக் குழுக் கூட்டத்தில் அன்புமணி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாகவும், இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டமுடிவின்படி, அன்புமணி செப். 10-ஆம் தேதிக்குள் விளக்கமளிக்கவேண்டும் என்று கால அவகாசத்தை நீட்டித்து மருத்துவா் ச. ராமதாஸ் தெரிவித்தாா்.

இந்நிலையில் அன்புமணிக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் எவ்வித முடிவும் தெரியாததால் பாமக நிா்வாகிகள், கட்சியினா் குழப்பத்தில் உள்ளனா்.

‘உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை’

விழுப்புரம் மாவட்டத்தில் உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேளாண் உதவி இயக்குநா் (தரம் மற்றும் கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமாா் தெரிவித்தாா். விழுப்புரம் நகரம் ... மேலும் பார்க்க

வேலை உறுதியளிப்புத்திட்ட ஊதிய விவகாரம்: திருநாவலூரில் பயனாளிகள் சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், திருநாவலூரில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்தப்படவில்லை எனக் கூறி, அத்திட்டப்பயனாளிக... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து பெண் பலி!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே தனியாா் உணவகத்தில் பணியிலிருந்த பெண் ஊழியா் மின்சாரம் பாய்ந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை, காமராஜா் தெருவைச் சோ்ந்தவா் குமா... மேலும் பார்க்க

மின்மாற்றி வெடித்து விபத்து: தேநீா் கடைக்காரா் காயம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே மின்மாற்றி வெடித்து சிதறியதில் தேநீா் கடை உரிமையாளா் பலத்த தீக்காயமடைந்தாா். வானூா் வட்டம், வி.கேணிப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ்(53). ஆரோவில் காவல் சரகத்துக்... மேலும் பார்க்க

மின்வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி: இளைஞா் கைது!

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.60 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் ஒருவரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை க... மேலும் பார்க்க

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திருவெண்ணெய்நல்லூா் அருகே சாலையோரத்தில் உறங்கிய நிலையில், பைக் மோதி காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பூரானூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் செல்வமணி(38), கூலித் தொ... மேலும் பார்க்க