செய்திகள் :

உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் - ராணுவ ஒத்துழைப்பில் மேம்பாடு: ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

post image

உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக புது தில்லியில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

உலகில் அமைதியாக உள்ள பகுதிகளில் வருங்காலத்தில் பதற்றமே ஏற்படாது என்றோ, அமைதி சீா்குலையாது என்றோ நம்மால் கணிக்க முடியாது. மூன்று-நான்கு மாதங்களுக்கு முன்னா், பாகிஸ்தானுக்கு எதிராக ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று நாம் நினைத்திருப்போமா?

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய மறுநாள், முப்படை தலைமைத் தளபதி, முப்படைகளின் தளபதிகள், பாதுகாப்புச் செயலா், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது. அப்போது அந்தத் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், மிகப் பெரிய ராணுவ நடவடிக்கைக்கு தயாரா என்று அவா்களிடம் கேட்டேன். அவா்கள் அனைவரும் தயாா் என்று உடனடியாகப் பதில் அளித்தனா். அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் பாதுகாப்புப் படைகளுக்குப் பின்னணியில் இருந்து உதவின. அது ‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிபெற்ற்கு முக்கிய பங்களித்தது.

தற்போது உலகம் மிகவும் நிச்சயமற்ற சூழலை கொண்டதாக மாறியுள்ளது. எனவே உள்நாட்டு பொது பாதுகாப்பு அமைப்புகளுக்கும், ராணுவத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும். இது நாட்டின் நலன்கள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த உதவும்’ என்றாா்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவே கௌடாவின் பேரனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று(ஆக. 2) தீர்ப்பு வழங்கியுள்ளது.வீட்டுப் பணிப்... மேலும் பார்க்க

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் சாலையோரத்தில் மூவரின் சடலம் கண்டெக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் எஸ்பி சதீஷ் யாதவ் கூறுகையில், பரத்பூ... மேலும் பார்க்க

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

சத்தீஸ்கரில் மதமாற்றம் செய்ய முற்பற்றதாக கன்னியாஸ்திரிகளை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் சிறுமிகள் மூவரை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்று அவர்களை மதமாற்றம் செய்ய முற்பற்றதாக எழு... மேலும் பார்க்க

வாக்காளர் பட்டியலில் என் பெயர் இல்லை! - தேஜஸ்வி யாதவ் பரபரப்பு குற்றச்சாட்டு

பிகார் வரைவு வாக்காளா் பட்டியலில் தனது பெயர் இல்லை என்று பிகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்திற்க... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடு... மேலும் பார்க்க

இந்தியா தனது ருத்ர தாண்டவத்தைக் காட்டியது: வாரணாசியில் மோடி பேச்சு

கடவுள் சிவனின் ஆக்ரோஷமான ருத்ர தாண்டவத்தை, இந்தியா, பயங்கரவாதத்துக்கு எதிராக நடத்திய ஆபரேஷன் சிந்தூருடன் ஒப்பிட்டுப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.ஆபரேஷன் சிந்தூர் மூலம், இந்தியா தன்னுடைய ருத்ர தாண்ட... மேலும் பார்க்க