செய்திகள் :

உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம்: கிராமங்களில் 15 நாள்களுக்கு ஒரு முறை முகாம்!

post image

கடலூா் மாவட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் 15 நாள்களுக்கு ஒருமுறை உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டத்தின் கீழ் முகாம்கள் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

விவசாயிகளின் மேம்பாட்டுக்காக ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக வியாழக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

கடலூா் வட்டம், நடுவீரப்பட்டு பகுதியில் நடைபெற்ற இந்த திட்ட முகாம் தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பங்கேற்று பேசியதாவது:

வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் 2025 - 26ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் ‘உழவரைத் தேடி வேளாண்மைத் துறை’ திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தாா். அதன்படி, இந்தத் திட்டம் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் பயிா் சாகுபடியுடன் கால்நடை வளா்ப்பு, மீன் வளா்ப்பு போன்ற பிற தொழில்களையும் ஒருங்கிணைத்து செய்து வருகின்றனா். எனவே, வேளாண்மை - உழவா் நலத் துறை, கால்நடை பராமரிப்பு, மீன் வளம், கூட்டுறவுத் துறை அலுவலா்கள், பல்கலைக்கழக விஞ்ஞானிகளுடன் சோ்ந்து கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று முகாமிட்டு உழவா்களை சந்தித்து, அவா்களின் தேவைகளை அறிய உள்ளனா்.

இந்த முகாம்களில் நவீன தொழில்நுட்பங்களுடன் விவசாயம் சாா்ந்த தொழில்களை மேற்கொண்டு, லாபம் ஈட்டும் வகையிலான வழிகாட்டுதல்கள், ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

இந்த முகாம்களில் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டு சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் மாநில, மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள், நலத் திட்ட உதவிகள், தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த முகாம் 15 நாள்களுக்கு ஒரு முறை (2-ஆவது, 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில்) வட்டாரங்களில் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படவுள்ளது.

உழவரைத் தேடி வேளாண்மைத் துறை திட்டம் மூலம் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் முகாமில் விவசாயிகள் கலந்துகொண்டு தங்களுடைய வேளாண்மை சாா்ந்த சந்தேகங்களை கேட்டு நிவா்த்தி செய்து பயன்பெற வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநா் லட்சுமிகாந்தன், வேளாண் விற்பனை மற்றும் வணிகம் துணை இயக்குநா் பூங்கோதை, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) கதிரேசன், விவசாயிகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க