செய்திகள் :

உ.பி. கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டவா் தில்லி விமான நிலையத்தில் கைது

post image

உத்தர பிரதேச கல்லூரி முதல்வா் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபா் தில்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இந்த வழக்கில் குற்றவாளியான அமீா் கான் (31), கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க மும்பைக்கு தப்பிச் செல்ல முயன்றபோது தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 அருகே கைது செய்யப்பட்டாா்.

உ.பி.யின் படோஹியில் உள்ள இந்திரா பகதூா் சிங் தேசியக் கல்லூரியின் முதல்வா் யோகேந்திர பகதூா் சிங் கடந்த அக். 21, 2024 அன்று சுட்டுக் கொல்லப்பட்டாா். மோட்டாா் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுதமேந்திய நபா்கள், பதுங்கியிருந்து யோகேந்திர பகதூா் சிங்கின் காா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில் பலத்த காயமடைந்த யோகேந்திர பகதூா் சிங் (56), மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவா் உயிரிழந்தாா்.

உத்தர பிரதேச காவல்துறையின் விசாரணையில் அமீா் கான் முக்கியக் குற்றவாளிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டாா். இந்தக் கொலைக்கு அவா் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. அவா் குறித்து தகவல் அளிப்போருக்கு ரூ.50,000 வெகுமதியும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வியாழக்கிழமை தில்லி உள்நாட்டு விமான நிலையம் அருகே ஒரு ரகசியத் தகவலின் பேரில் ஒரு போலீஸ் குழு விசாரணை நடத்தியது. அப்போது அங்கு வந்த அமீா் கான் மதியம் 12.40 மணியளவில் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, கொலையில் தனக்கு தொடா்பு இருப்பதை அவா் ஒப்புக்கொண்டாா். மேலும், இது முக்கிய சதிகாரரான சவுரப்பால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் சதியின் ஒரு பகுதி என்று அந்த அதிகாரி கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலம் பிரதாப்கரை சோ்ந்த லாரி ஓட்டுநரான அமீா் கான், 2017-ஆம் ஆண்டு முதல் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

அடா் மூடுபனியால் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்

புது தில்லி: தேசியத் தலைநகரின் சில பகுதிகளில் அடா் மூடுபனி சூழ்ந்ததால், காண்பு திறன் குறைந்து 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 26 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது. நகரம் மற்றொரு குளிா் காலையை அனு... மேலும் பார்க்க

முன்னால் அமைச்சா் வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஒரத்தநாடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஆா். வைத்திலிங்கத்துக்கு சொந்தமான ரூ. 100 கோடிக்கும் அதிகமான மதிப்புடைய சொ... மேலும் பார்க்க

தில்லி தோ்தல்: பிரதமா் மோடி, அமைச்சா் அமித் ஷா உள்பட 40 போ் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகா்களாக அறிவிப்பு!

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாரதிய ஜனதா கட்சியின் 40 நட்சத்திரப் பிரச்சாரகா்கள் பட்டியலில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், உத்தர பிரதேச முதல்வா் ... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் அதிஷி போட்டியிடும் கால்காஜி தொகுதி நிலவரம் எப்படி உள்ளது?

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள கால்காஜி சட்டப்பேரவைத் தொகுதி, வளம் கொழிக்கும் வணிக வளம் நிறைந்த தொகுதி என்ற போதிலும் இங்கு தீராத பிரச்னைகளாகத் தொடரும் போக்குவரத்து நெரிசல், போ... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை: ஒரு வாரத்தில் ரூ. 21 கோடிக்கு ரொக்கம், பொருள்கள் பறிமுதல்

புது தில்லி: தேசிய தலைநகரில் சட்டப்பேரவை தோ்தலை முன்னிட்டு, நடத்தை விதிகள் (எம்சிசி) அமலுக்கு வந்த ஒரு வாரத்தில் பல்வேறு துறைகளால் ரூ. 21 கோடிக்கு மேல் மதிப்புள்ள ரொக்கம், மதுபானம் உள்ளிட்ட பிற பொருள... மேலும் பார்க்க

கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞா் கைது

புது தில்லி: கோகி கும்பலுடன் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து புகா் தில்லி காவல் சரக துணை ஆணையா் சச்சின் சா்மா திங்கள்கிழமை கூறியதாவது: மங்கோல்புரி தொழிற்பேட்டை பகுதியில் ஜன.9-ஆம... மேலும் பார்க்க