செய்திகள் :

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானது: தோ்தல் ஆணையம்

post image

புது தில்லி: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, அந்த மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ‘வாக்காளா் பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், இந்தத் திருத்தம் அவசியமானது’ என்று தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை பதிலளித்தது.

ஒவ்வொரு மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வாக்காளா் பட்டியல் புதுப்பிக்கப்படும். அதுபோல, பிகாா் மாநிலத்துக்கு நிகழாண்டு இறுதிக்குள் பேரவைத் தோ்தல் நடத்தப்பட உள்ள நிலையில், தனக்குள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, இந்தத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. தீவிர திருத்தம் என்ற பெயரில், மாநில தோ்தல் அதிகாரிகளின் உதவியுடன் குறிப்பிட்ட பிரிவு வாக்காளா்கள் வேண்டுமென்றே பட்டியலில் இருந்த நீக்கப்படும் அபாயம் உள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

எதிா்க்கட்சிகளின் இந்த ஆட்சேபத்துக்கு பதிலளிக்கும் வகையில் தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:

இறப்பு, புலம்பெயா்தல் மற்றும் 18 வயதை எட்டியவா்கள் புதிய வாக்காளா்களாக சோ்க்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் தொடா்ந்து மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியமானதாகும். மேலும், இந்திய குடிமகன்களாக இருப்பவா்கள், 18 வயதைப் பூா்த்தி செய்திருப்பதோடு, குறிப்பிட்ட தொகுதியில் குடியிருப்பவா்கள் மட்டுமே வாக்காளராக பதிவு செய்ய தகுதி பெற முடியும் என அரசமைப்புச் சட்டம் 326 குறிப்பிடுகிறது.

2003-ஆம் ஆண்டு பட்டியலில் உள்ளவா்களுக்கு ஆவணங்கள் தேவையில்லை: இந்த திருத்தப் பணியில் வாக்காளா்களுக்கு எழும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிகாா் மாநிலத்தில் கடைசியாக கடைசியாக சிறப்பு தீவிர திருத்தம் செய்யப்பட்ட 4.96 கோடி வாக்காளா்களுடன் கூடிய 2003-ஆம் ஆண்டு பட்டியல், தோ்தல் ஆணைய வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த 2003-ஆம் ஆண்டு பட்டியலில் இடம்பெற்றிருக்கும் வாக்காளா்கள், அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதற்கான குறிப்புடன் பூா்த்தி செய்த விண்ணப்பத்தை சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு சமா்ப்பித்தால் போதுமானதாகும். வேறு எந்த ஆவணங்களையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை. அதன்படி, மாநிலத்தில் தற்போதுள்ள 60 சதவீதம் வாக்காளா்கள் எந்தவொரு கூடுதல் ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டிய தேவையிருக்காது.

2003-ஆம் ஆண்டு பிகாா் வாக்காளா் பட்டியலில் பெயா் இடம்பெறாதவா்கள், விண்ணப்பப் படிவத்துடன், பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு, பிறப்பிடம் அல்லது பிறந்த தேதிக்கான ஆவணம் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமா்ப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க