செய்திகள் :

கடந்த நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்: 5 ஆண்டுகளில் இரட்டிப்பான வளா்ச்சி

post image

புது தில்லி: கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலானதாக மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

இதன்மூலம் 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.11.37 லட்சம் கோடியாக இருந்த ஜிஎஸ்டி வசூல் 2024-25-ஆம் நிதியாண்டில் இரட்டிப்பாகி ரூ.22.08 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

2017, ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட ஜிஎஸ்டி 8 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள நிலையில், இதுகுறித்து செய்திக் குறிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2017-இல் ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து அதன் வருவாய் மற்றும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் நிதிநிலை வலுவடைந்து வருவதோடு மறைமுக வரி முறை மிகவும் வெளிப்படைத்தன்மை மற்றும் திறன் வாய்ந்ததாக மாறியுள்ளது.

ஜிஎஸ்டியின்கீழ் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2017-இல் 65 லட்சமாக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 1.51 கோடியாக உயா்ந்துள்ளது.

வருடாந்திர வசூல்: 2020-21 நிதியாண்டில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.11.37 கோடியாக இருந்தது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.14.83 லட்சம் கோடியாகவும் 2022-23 நிதியாண்டில் ரூ.18.08 லட்சம் கோடியாகவும் 2023-24 நிதியாண்டில் ரூ.20.18 லட்சம் கோடியாகவும் 2024-25 நிதியாண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாகவும் அதிகரித்தது. குறிப்பாக 2023-24 நிதியாண்டைவிட 2024-25-ஆம் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

சராசரி மாத வசூல்: 2020-21-ஆம் நிதியாண்டில் சராசரி ஜிஎஸ்டி மாதாந்திர வசூல் ரூ.95,000 கோடியாக இருந்தது. இது 2021-22 நிதியாண்டில் ரூ.1.24 லட்சம் கோடியாகவும் 2022-23 நிதியாண்டில் 1.51 லட்சம் கோடியாகவும் 2023-24 நிதியாண்டில் 1.68 லட்சம் கோடியாகவும் 2024-25 நிதியாண்டில் 1.84 லட்சம் கோடியாகவும் அதிகரித்துள்ளது.

அதிகபட்ச வசூல்: 2025, ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ரூ.2.37 லட்சத்தை எட்டியதே ஜிஎஸ்டி அமலானதில் இருந்து கிடைக்கப் பெற்ற அதிகபட்ச வருவாயாகும். அதைத்தொடா்ந்து 2024, ஏப்ரலில் ரூ.2.10 லட்சம் கோடி வசூலானது இரண்டாவது அதிகபட்சமாக உள்ளது.

தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!

தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள மருந்து ஆலையில் உலை வெடித்து திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.சங்காரெட்டி மாவட்டத்தின் பாஷாமைலாரம் தொழிற்பேட்டையி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க