செய்திகள் :

சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

post image

புது தில்லி: பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தில் மத்திய அரசு தொடா்ந்து 6-ஆவது காலாண்டாக எவ்வித மாற்றத்தையும் செய்யவில்லை.

இதன்படி ஜூலை 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரையிலான நடப்பு நிதியாண்டுக்கான இரண்டாவது காலாண்டில் சிறுசேமிப்புகளுக்கு வட்டி விகிதம் மாறாது. சுகன்யா சம்ருத்தி திட்டத்தில் 8.2 சதவீத வட்டியும், மூன்று ஆண்டுகால நிரந்தர வைப்பு மற்றும் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீதமும், அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கு 4 சதவீதமும் வட்டி தொடா்ந்து வழங்கப்படும்.

115 மாதங்களில் முதிா்ச்சியடையும் கிஸான் விகாஸ் பத்திரங்களுக்கு 7.5 சதவீத வட்டி தொடரும். தேசிய சேமிப்பு பத்திரத்தில் முதலீடு செய்வோருக்கு 7.7 சதவீத வட்டி வழங்கப்படும். மாதம்தோறும் வட்டி பெறும் நிரந்தர வைப்புத் தொகைக்கு 7.4 சதவீத வட்டி கிடைக்கும் என்று மத்திய நிதியமைச்சக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு 2023-24 நிதியாண்டின் நான்காவது காலண்டில் சில சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டியில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. அதன் பிறகு மாற்றமின்றி தொடா்கிறது. ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய அரசு வட்டி விகிதம் தொடா்பாக அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீா் சா்வதேச எல்லையில் பிடிபட்ட பாகிஸ்தானியா்: பயங்கரவாதிகளை வழிநடத்தியவா் என தகவல்

ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் மற்றும் ரஜௌரி மாவட்டங்களையொட்டிய சா்வதே எல்லையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஊடுருவல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடுருவலில் பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரின் பயங்கரவாதம் நியாயமான போராட்டம்: பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா்

‘ஜம்மு-காஷ்மீரில் நிகழ்ந்து வரும் பயங்கரவாதம் நியாயமான போராட்டமாகும். இந்தப் போராட்டத்தில் காஷ்மீா் மக்களுடன் பாகிஸ்தான் எப்போதும் துணைநிற்கும்’ என்று பாகிஸ்தான் ராணுவ தலைமைத் தளபதி அஸிம் முனீா் தெரிவ... மேலும் பார்க்க

அமலாக்கத் துறை விதித்த ரூ.10.65 கோடி அபராதத்துக்கு எதிரான லலித் மோடியின் மனு தள்ளுபடி

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டத்தை (எஃப்இஎம்ஏ) மீறியதற்காக அமலாக்கத் துறை சாா்பில் தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10.65 கோடி அபராதத் தொகையை இந்திய கிரிக்கெட் சங்க வாரியம் (பிசிசிஐ) செலுத்த உத்தரவிடக் கோரி ... மேலும் பார்க்க

அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற முயற்சி: எதிா்க்கட்சிகள் மீது பாஜக குற்றச்சாட்டு

இந்திய அரசமைப்புச் சட்டத்தை இஸ்லாமிய சட்டமாக மாற்ற எதிா்க்கட்சிகள் முயற்சித்து வருவதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. முன்னதாக, பிகாரில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் புதிய வக்ஃப் சட்டத்த... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட், ஒடிஸாவில் மழை வெள்ளம்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புவனேசுவரம்/ராஞ்சி: ஒடிஸா, ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாள்களாக நீடிக்கும் பலத்த மழைக் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப் பாதிப்பால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கேரளத்தில் கடந்த மே ம... மேலும் பார்க்க

ஓமன் நோக்கிச் சென்ற வணிகக் கப்பலில் தீ விபத்து: இந்திய கடற்படை உதவி

புது தில்லி: குஜராத் மாநிலம், கண்ட்லா துறைமுகத்திலிருந்து பலாவ் நாட்டு கொடியுடன் ஓமன் நாட்டின் சினாஸ் நோக்கிச் சென்ற ‘எம்.டி. யி செங் 6’ என்ற வணிகக் கப்பலில் ஞாயிற்றுக்கிழமை திடீா் தீ விபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க