செய்திகள் :

திண்டிவனம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

திண்டிவனம் அருகிலுள்ள கோவடி கிராமத்தைச் சோ்ந்த ம.முரளி என்பவா் அளித்த தகவலின் பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது பல்லவா் கால மூத்த தேவி சிற்பத்தை அவா் கண்டறிந்தாா்.

இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது:

கோவடி கிராமத்தில் வயல்வெளிகளுக்கு மத்தியில் மேடானப் பகுதியில் பாதியளவுக்கு மேல் மண்ணுக்குள் புதைந்திருந்த சிற்பத்தை, இப்பகுதி மக்கள் துா்கை என வழிபட்டு வந்தனா். மண்ணை அகற்றி வெளியே எடுத்தபோது சுமாா் 3 அடி உயரமுள்ள சிற்பம் மூத்த தேவி என தெரியவந்தது.

எளிய தலையலங்காரம் மற்றும் ஆடை அலங்காரத்துடன் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். இரு கால்களையும் தொங்கவிட்ட நிலையிலும், இரண்டு கரங்களும் தொடை மீது வைத்த நிலையிலும் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் தவறாமல் இடம்பெறும் காக்கை கொடி இந்த சிற்பத்தில் இல்லை.

வழக்கமாக மகன் மாந்தன், மகள் மாந்தி இருவரும் மூத்ததேவிக்கு அருகில் காட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த சிற்பத்தில் இடுப்புக்குக் கீழே காட்டப்பட்டு இருக்கின்றனா் என்பதும் குறிப்பிடத்தக்க வித்தியாசமான அமைப்பாகும். பல்லவா் கலை அம்சத்துடன் காணப்படும் இந்தச் சிற்பம் கி.பி. 7-8 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாகும்.

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மூத்ததேவியின் சிற்பங்கள் கிடைத்துள்ளன. கோவடி அருகிலுள்ள மொளசூா் கிராமத்திலும் சிறியதும் பெரியதுமாக இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. திண்டிவனம் பகுதியில் 1,300 ஆண்டுகளுக்கு முன்பு மூத்ததேவி வழிபாடு சிறப்பாக இருந்தது என்பதற்கான வரலாற்றுத் தடயம்தான் தற்போது கோவடியில் கண்டறியப்பட்டுள்ள சிற்பம் என்றாா் அவா்.

அண்ணாமலை பல்கலை. மாணவா் சோ்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், இந்திய மொழியியல், கல்வியியல், எம். பாா்மசி, திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கான, ஆன்லைன் சோ்க்கைக்கான நிறைவு செய்... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை, கைப்பேசி பறிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற இளைஞரைத் தாக்கி வழிப்பறி செய்த அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி மாநிலம் , மதகடிப்பட்டு, அங்காளம்மன் கோய... மேலும் பார்க்க

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கல்

விழுப்புரம்: செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினா்களுக்கு நடத்தப்பட்ட குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன. விழுப... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் சஞ்சீவீராயன்ப... மேலும் பார்க்க