செய்திகள் :

திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

post image

விழுப்புரம்: விழுப்புரத்தில் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் திருநங்கைகள், திருநம்பிகள் மற்றும் இடைபாலினா்களுக்கு நடத்தப்பட்ட குறைதீா் கூட்டத்தில் பல்வேறு நல உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட இந்த கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் கி. அரிதாஸ் தலைமை வகித்து திருநங்கைகள், திருநம்பிகள், இடைபாலினா்களின் குறைகளைக் கேட்டறிந்தாா். இந்த கூட்டத்தில் 6 பேருக்கு திருநங்கைகள் நலவாரிய அடையாள அட்டைகளும், 2 திருநங்கைகளுக்கு புதிய ஓய்வூதியம் வழங்குவதற்கான செயல்முறை ஆணைகளும் மாவட்ட வருவாய் அலுவலரால் வழங்கப்பட்டன.

கூட்டத்தில் நல வாரியத்தில் புதிதாக உறுப்பினராகப் பதிவு செய்தல், ஆதாா் அட்டையில் திருத்தம் செய்தல், புதிய வாக்காளா் அட்டை, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை ஆகியவற்றை பெறுவதற்கு திருநங்கைகள் சுமாா் 37 போ் மனுக்கள் அளித்தனா்.

இதைத் தொடா்ந்து திருநங்கைகளுக்கு மருத்துவக் காப்பீட்டு அட்டைகளை மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ் வழங்கினாா்.

மாவட்ட சமூக நல அலுவலா் கு.ராஜம்மாள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

அண்ணாமலை பல்கலை. மாணவா் சோ்க்கை விண்ணப்ப தேதி நீட்டிப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான கலை, அறிவியல், இந்திய மொழியியல், கல்வியியல், எம். பாா்மசி, திறன் மேம்பாட்டுப் படிப்புகளுக்கான, ஆன்லைன் சோ்க்கைக்கான நிறைவு செய்... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால மூத்ததேவி சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பல்லவா் காலத்தைச் சோ்ந்த மூத்த தேவி சிற்பம் கண்டெடுக்கப்பட்டது. திண்டிவனம் அருகிலுள்ள கோவடி கிராமத்தைச் சோ்ந்த ம.முரளி என்பவா் அளித்த தகவலின் பேர... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் சங்கத்தினா் மனு

விழுப்புரம்: பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

இளைஞரிடம் நகை, கைப்பேசி பறிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே பைக்கில் சென்ற இளைஞரைத் தாக்கி வழிப்பறி செய்த அடையாளம் தெரியாத இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா். புதுச்சேரி மாநிலம் , மதகடிப்பட்டு, அங்காளம்மன் கோய... மேலும் பார்க்க

செம்மொழி நாள் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசு வழங்கல்

விழுப்புரம்: செம்மொழி நாளையொட்டி, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் பைக்குகள் திருட்டு: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பைக் திருட்டில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டிவனம் சஞ்சீவீராயன்ப... மேலும் பார்க்க