செய்திகள் :

உ.பி: படகு கவிழ்ந்ததில் 3 பேர் நீரில் மூழ்கி பலி

post image

உத்தரப் பிரதேசத்தில் 16 பேருடன் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியானார்கள்.

உத்தரப் பிரதேச மாநிலம், ரத்தன்கஞ்ச் கிராமத்தில் உள்ள சர்தா ஆற்றில் 16 பேருடன் சென்ற படகு சனிக்கிழமை கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 பேர் பலியானார்கள். இரண்டு வயது குழந்தை மீட்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பப்பட்டது.

மேலும் 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பலியானவர்கள் சஞ்சய் (32), குஷ்பூ (30) மற்றும் கும்கம் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சடலங்கள் மீட்கப்பட்டு உடற்கூராய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை ஹோலி கொண்டாட்டத்தின் போது அதே ஆற்றில் மூழ்கி இறந்த தினேஷின்(22) இறுதிச் சடங்கிற்காக குடும்பத்தினரும் கிராம மக்களும் இரண்டு படகுகளில் சாரதா நதியைக் கடந்து சென்று கொண்டிருந்தனர்.

சில குடும்ப உறுப்பினர்களையும் உடலையும் ஏற்றிச் சென்ற படகு கரையை அடைந்தபோது, ​​16 பேருடன் சென்ற துரதிர்ஷ்டவசமான படகு ஆற்றின் நடுவில் கவிழ்ந்ததாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

மதுபான முறைகேட்டில் என் மகனுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை: சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா்

ரூ.2,100 கோடி மதுபான முறைகேடு தொடா்பாக தனது மகன் சைதன்யா பகேலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பவில்லை என்று சத்தீஸ்கா் முன்னாள் முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா். கடந்த 2018 முதல் 2023-ஆம் ஆண்டு வரை ... மேலும் பார்க்க

வாக்காளா் அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைக்கத் திட்டம்!

வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரி வாக்காளா் அடையாள எண் வழங்கப்பட்ட விவகாரம் பெரும் சரச்சையாக வெடித்துள்ள நிலையில், வாக்காளா் அடையாள அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைப்பது குறித்து உயா் அரசு அதிக... மேலும் பார்க்க

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசுக்கு மாயாவதி வலியுறுத்தல்

நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவா் மாயாவதி வலியுறுத்தியுள்ளாா். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனா் கன்ஷி ராமின் 91-ஆவது ... மேலும் பார்க்க

அரசு வழக்குரைஞா்களில் 30% பெண்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா வலியுறுத்தல்

மத்திய, மாநில அரசு வழக்குரைஞா்களாக நியமிக்கப்படுவோரில் குறைந்தபட்சம் 30 சதவீதம் போ் பெண்களாக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற பெண் நீதிபதி பி.வி.நாகரத்னா தெரிவித்தாா். இதுதொடா்பாக மகாராஷ்டிரத்தில் ... மேலும் பார்க்க

அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை இன்று கூடுகிறது

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமா் கோயிலின் நிா்வாக அறக்கட்டளையான ஸ்ரீராம ஜென்ம பூமி தீா்த்த க்ஷேத்ரத்தின் அறங்காவலா்கள் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) கூடுகின்றனா். மணிராம் சவானி கோயிலில் நடைபெறும் இந்... மேலும் பார்க்க

குஜராத், மகாராஷ்டிரம்: நீரில் மூழ்கி 13 போ் உயிரிழப்பு

குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் வெவ்வேறு சம்பவங்களில் நீரில் மூழ்கி 6 சிறுவா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். குஜராத்தின் கட்ச் மாவட்டம், அன்ஜாா் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 8 முதல்... மேலும் பார்க்க