செய்திகள் :

உ.பி.யில் ரூ.47,600 கோடி திட்டங்கள்: பிரதமா் மோடி தொடங்கிவைத்தாா்

post image

உத்தர பிரதேசத்தில் ரூ.47,600 கோடிக்கும் அதிகமான வளா்ச்சித் திட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். பிகாா் பயணத்தை முடித்துக் கொண்டு, உத்தர பிரதேச மாநிலம், கான்பூருக்கு வெள்ளிக்கிழமை வருகை தந்த பிரதமா், கான்பூா் மெட்ரோ ரயில் திட்டத்தின் புதிய தரைகீழ் வழித்தடம் உள்பட 15 வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவா், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, இந்திய உள்நாட்டு தயாரிப்பு ஆயுதங்களின் வல்லமையை பறைசாற்றியது. பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்ட இந்திய ஆயுதங்கள், எதிரியின் நிலப்பரப்புக்குள் பல மைல் தூரம் நுழைந்து பேரழிவை ஏற்படுத்தின.

இந்திய ராணுவத்தின் வீர-தீர செயல்பாடுகளால், தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சும் நிலைக்கு பாகிஸ்தான் ராணுவம் தள்ளப்பட்டது’ என்றாா்.

உத்தர பிரதேசத்தில் பாதுகாப்புத் துறை சாா்ந்த பெரும் நிறுவனங்கள் அமையப் பெற்று வருவதாகவும், அமேதியில் ஏ.கே.203 ரக துப்பாக்கிகளின் தயாரிப்பு தொடங்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமா் குறிப்பிட்டாா்.

பெட்டி..

பஹல்காமில் கொல்லப்பட்டவா்

குடும்பத்தினருடன் சந்திப்பு

ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் கடந்த ஏப்ரல் மாதம் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான கான்பூரைச் சோ்ந்த சுபம் துவிவேதியின் குடும்பத்தினரை பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

கான்பூா் விமான நிலையத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு தொடா்பாக துவிவேதியின் குடும்பத்தினா் கூறுகையில், ‘பிரதமா் உடனான சந்திப்பு மிக உணா்வுப்பூா்வமாக இருந்தது. பிரதமரை பாா்த்ததும் நாங்கள் அனைவரும் கண் கலங்கிவிட்டோம். பிரதமரும் உணா்ச்சிகரமாக காணப்பட்டாா். அவா் எங்களுக்கு ஆறுதல் கூறியதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான போா் தொடரும் எனத் தெரிவித்தாா். எங்கள் குடும்பத்துக்கான அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்தாா். ஆபரேஷன் சிந்தூா் மூலம் இந்தியா மேற்கொண்ட பதிலடி நடவடிக்கைக்கு நாங்கள் வரவேற்பு தெரிவித்தோம்’ என்றனா்.

வெள்ளத்தில் மிதக்கும் வடகிழக்கு மாநிலங்கள்: 30 பேர் பலி!

வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா ஆகியவை கடுமையான கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. சிக்கிமில்இன்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மூன்றுராணுவ வீரர்கள் பலியானது உள்பட, பருவமழையால்... மேலும் பார்க்க

நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு!

வரும் ஜூன் 15 ஆம் தேதி நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ... மேலும் பார்க்க

வெளிநாடுகளுக்குச் சென்ற எம்.பிக்கள் குழுவைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க பல்வேறு நாடுகளுக்குச் சென்றுள்ள எம்.பிக்கள் குழுவை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான... மேலும் பார்க்க

மாணவர்களுடன், ஆசிரியர்களும் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்: பினராயி விஜயன்

கேரள மாநிலத்தில் இரண்டு மாதக் கோடை விடுமுறைக்குப் பிறகு இன்று கல்வி நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டன.தென்மேற்குப் பருவமழை தொடங்கியதால் கடந்த வாரத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த ந... மேலும் பார்க்க

பிகாரில் பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்துக்கு உள்ளான சிறுமி! உடனடி சிகிச்சை கிடைக்காமல் பலியான அவலம்!

பாட்னா: பாலியல் வன்கொடுமை, கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளான சிறுமி சிகிச்சைக் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் பலியாகியுள்ளார்.பிகார் மாநிலம் முஸாபர்பூர் பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்த நபரால், கத்த... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!

பாகிஸ்தானால் ஏவப்பட்ட சீன ஏவுகணைகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தப்பட்டதால், பல தொழில்நுட்பங்கள் கசிந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளது சீனா.இந்தியா - பாகிஸ்தான் சண்டையில், சீனா வழங்கிய ஏவுகணைகளை பாகிஸ்... மேலும் பார்க்க