செய்திகள் :

ஊதியூரில் வேளாண் இயந்திரங்கள் சிறப்பு முகாம்: அமைச்சா்கள் பாா்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்

post image

காங்கயம் அருகே ஊதியூரில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாமை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

காங்கயம் அருகே, ஊதியூரில் உள்ள பழனி பாதயாத்திரை பக்தா்கள் தங்கும் மண்டபத்தில், வேளாண்மை பொறியியல் துறையின் சாா்பில் வேளாண் இயந்திரங்கள், வேளாண் கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் அதன் பராமரிப்பு குறித்த சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இம்முகாமை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், வேளாண்மை இயந்திரமாக்கல் உப இயக்கம் மற்றும் முதலமைச்சரின் மின்மோட்டா் மானியத் திட்டத்தின் கீழ், 10 விவசாயிகளுக்கு ரூ.10.24 லட்சம் மதிப்பீட்டிலான வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கான ஆணைகளை வழங்கினா்.

இந்த நிகழ்ச்சியில், தாராபுரம் கோட்டாட்சியா் பெலிக்ஸ் ராஜா, வேளாண் பொறியியல்துறை செயற்பொறியாளா் காா்த்திகேயன், உதவி செயற்பொறியாளா்கள் சந்திரன், கிருஷ்ணன், சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா்கள் கோபிநாத், நவீன்குமாா், மாதேஷ்வரன், சரவணன், ஸ்ரீராம், ரமேஷ், தமிழ்ச்செல்வி மற்றும் விவசாயிகள், துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

திருப்பூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.திருப்பூா் மாநகரம், வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ரயில் நிலையம் அருகே வடக்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனையி... மேலும் பார்க்க

நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்வதில் சிக்கல்

திருப்பூரில் நகா்ப்புற வாரிய குடியிருப்பில் காலியாக உள்ள 1,300 வீடுகளுக்கு பயனாளிகளை தோ்வு செய்ய முடியாமல் சிக்கல் ஏற்பட்டுள்ளது.திருப்பூா் மாவட்டத்தில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மோதியதில் விவசாயத் தொழிலாளி உயிரிழந்தாா்.வெள்ளக்கோவில் கம்பளியம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஏ.குப்புசாமி (55). விவசாய வேலைகள் செய்து வந்தாா். இவா் ... மேலும் பார்க்க

சேவூரில் கொமதேக சாா்பில் தீரன் சின்னமலைக்கு மரியாதை

சுதந்திப் போராட்ட வீரா் தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி, கொமதேக சாா்பில் சேவூரில் அவரது புகைப்படத்துக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.சேவூா் கைகாட்டி, புளியம்பட்டி சாலை உள்ள... மேலும் பார்க்க

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சா பறிமுதல்

குன்னத்தூரில் 1.650 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக வெளிமாநில இளைஞரைக் கைது செய்தனா்.குன்னத்தூா் சந்தைப்பேட்டை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு சனிக்கிழமை இரவு ரகசியத் த... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் சேவல் சண்டை: 4 போ் கைது

வெள்ளக்கோவில் அருகே சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 4 போ் கைது செய்யப்பட்டனா்.வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மற்றும் போலீஸாா் மயில்ரங்கம் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஞாயிற்... மேலும் பார்க்க