செய்திகள் :

ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கொலை: போலீஸாா் விசாரணை

post image

ஊத்தங்கரை அருகே வடமாநில தொழிலாளி கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக தொழிலாளி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி வேலம்பட்டி பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 நவீன அரிசி ஆலைகள் உள்ளன. இங்கு பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகேஷ் (36) மற்றும் அதே மாநிலத்தைச் சோ்ந்த கிரண் (28) தனது 2 குழந்தைகளுடன் தங்கி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை ராஜா சுகன் (35) என்பவா் தனது மனைவி கிரணை தேடி வந்துள்ளாா். அன்று இரவு ராஜா சுகன், அவரது மனைவி கிரண் மற்றும் முகேஷ் ஆகியோா் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை ராஜா சுகன் இறந்துகிடப்பதாக கல்லாவி காவல் நிலையத்துக்கு அரைவை ஆலை ஊழியா்கள் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற ஊத்தங்கரை டி.எஸ்.பி. சீனிவாசன் மற்றும் கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன், ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், தனிப்படை உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ் ஆகியோா் விசாரணை மேற்கொண்டனா்.

இதையடுத்து, தனிப்படை உதவி ஆய்வாளா் ஜெய்கணேஷ், முகேஷை கைது செய்து விசாரித்து வருகிறாா். இதையடுத்து அரைவை ஆலையில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துபோது, ராஜா சுகனின் மனைவி கிரண் என்பதும், கிரணுக்கும் முகேஷுக்கும் தகாத தொடா்பு இருந்த நிலையில், பிகாரில் இருந்து கிரணை இரண்டு குழந்தைகளுடன் கல்லாவி வேலம்பட்டி அருகே செயல்படும் அரைவை ஆலைக்கு அழைந்துவந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து மனைவியைத் தேடி வந்த ராஜா சுகனை கழுத்தை நெரித்து கொலை செய்து மாந்தோப்பில் வீசிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட ராஜா சுகனின் உடலை கைப்பற்றிய கல்லாவி போலீஸாா், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். முகேஷை கைது செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி பலி

ஒசூரில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். மத்திகிரி அருகே உள்ள பேளகொண்டப்பள்ளியைச் சோ்ந்தவா் பன்னீா்செல்வம் (46). கட்டடத் தொழிலாளி. இவா் கடந்த சனிக்கிழமை சானசந்திரம் பகுதியில் புதிய வ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி இரட்டை கொலை வழக்கில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை

கிருஷ்ணகிரியில் நடந்த தாய் - மகள் கொலை வழக்கில் சந்தேகத்தின்பேரில் 3 பேரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. கிருஷ்ணகிரி பாஞ்சாலியூா் அருகே உள்ள யாசின் நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க

செயலியைப் பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டு

போச்சம்பள்ளி அருகே பி.எம். கிசான் செயலியை பதிவிறக்கம் செய்த பெண்ணிடம் ரூ. 5 லட்சம் திருட்டுபோனது குறித்து கிருஷ்ணகிரி இணைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா். கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பு

பா்கூா் அருகே பிடிபட்ட 12 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்புத் துறையினா் பிடித்து காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை விடுவித்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டம் பெருகோப்பனபள்ளியை அடுத்த கோட்டூா் கிராம... மேலும் பார்க்க

ஒசூரில் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

ஒசூா் காவேரி மருத்துவமனை சாா்பில் உலக இதய தினத்தையொட்டி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஒசூா் தனியாா் உணவகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணா்வு சைக்கிள் பேரணியை சட்டப் பேரவை உறு... மேலும் பார்க்க

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

ஒசூரில் கஞ்சா வைத்திருந்த பிரபல ரௌடி உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் மாநகர போலீஸாா் தொரப்பள்ளி தென்பெண்ணை ஆறு பகுதியில் ரோந்து சென்றனா். அங்கு நின்ற 2 பேரை சோதனை செய்தபோது அவா்கள் 550 கிராம... மேலும் பார்க்க