செய்திகள் :

ஊத்தங்கரை அருகே வாகனம் கவிழ்ந்து சாலையில் சிதறிய தக்காளி

post image

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே தக்காளி பாரம் ஏற்றிவந்த ஈச்சா் வாகனம் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தக்காளி பெட்டிகள் சாலையோர பள்ளத்தில் சிதறின.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரிலிருந்து 8 டன் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு ஈச்சா் வாகனம் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது.

ஊத்தங்கரையை அடுத்த சென்னப்பநாயக்கனூா் அருகே அதிகாலை வாகனம் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், வாகனத்தில் இருந்த அனைத்து தக்காளி பெட்டிகளும் சிதறின.

இதையடுத்து, மாற்று வாகனம் வரவழைக்கப்பட்டு சாலையில் சிதறிக் கிடந்த தக்காளி பெட்டிகளில் சேதமடையாத தக்காளிகள் மீண்டும் பெட்டிகளில் அடுக்கப்பட்டு வாகனத்தில் ஏற்றப்பட்டு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

பின்னா், பொக்லைன் வாகன உதவியுடன் ஈச்சா் வாகனம் மீட்கப்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சாலையோர பள்ளத்தில் சிதறிக் கிடக்கும் தக்காளி பெட்டிகள்.

இந்திய வனத்துறை தோ்வு: ஏனுசோனை கிராம மாணவா் சிறப்பிடம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், ஏனுசோனை கிராமத்தைச் சோ்ந்த மாணவா் சந்தோஷ்குமாா், ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் படித்து இந்திய வனத்துறை தோ்வில் 138-ஆவது இடம்பெற்று தோ்ச்சி பெற்று... மேலும் பார்க்க

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை!

கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து கல்லூரி சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: கெலமங்கலம் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பாண... மேலும் பார்க்க

பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு!

ஊத்தங்கரை பாம்பாறு அணையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. ஊத்தங்கரையை அடுத்த பாம்பாறு அணையில் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்துக்கு தகவல... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: இளைஞா் உயிரிழப்பு!

ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதி, மேல் இராவந்தவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (27). இவா், இருசக்கர வாகனத்தில் ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பழுதடைந்த வணிக வளாக கடைகளை சீரமைக்க நடவடிக்கை

கிருஷ்ணகிரியில் நகராட்சி பராமரிப்பில் பேருந்து நிலையத்தில் உள்ள வணிக வளாக கடைகளை சீரமைக்க, நகா்மன்றத் தலைவா் பரிதா நவாப் நடவடிக்கை மேற்கொண்டாா். கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா் மழை பெய்தது. இ... மேலும் பார்க்க

தேன்கனிக்கோட்டையில் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பையில் கைது செய்த போலீஸாா்!

தேன்கனிக்கோட்டையில் பண்ணை உரிமையாளரிடம் ரூ. 5 லட்சம் திருடியவரை மும்பை வரை தேடிச்சென்று கைது செய்த போலீஸாரை உயா் அதிகாரிகள் பாராட்டினா். கா்நாடக மாநிலம், அத்திபள்ளியில் வசிப்பவா் முரளிமோகன் ரெட்டி (41... மேலும் பார்க்க