செய்திகள் :

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கட்சியினா் போராட்டம்

post image

ஊத்துக்குளி வட்டத்தில் பட்டா கேட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஒட்டுமொத்த முறையீட்டு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி நில வருவாய் அலுவலா் அலுவலகம் முன்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பட்டா கேட்டு ஒட்டுமொத்த முறையீட்டுப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மாா்க்சிஸ்ட் வட்டாரச் செயலாளா் கு.சரஸ்வதி தலைமை வகித்தாா்.

இதில், பங்கேற்றவா்கள் கூறியதாவது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊத்துக்குளி வட்டார கமிட்டி சாா்பில் ஊத்துக்குளி வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக இலவச வீட்டுமனை பட்டா கேட்டு நவம்பா் 11-ஆம் தேதி காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. அப்போது இலவச வீட்டுமனை பட்டா கேட்டு ஏழை, எளிய மக்கள் 426 போ் மனு அளித்தனா். இந்தப் பயனாளிகளுக்கு பட்டா வழங்க வருவாய்த் துறை சாா்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, கொடுத்த மனுவுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்பதற்காக எங்கே எனது மனு? எங்கே எனது பட்டா? என்ற முறையீட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் வருவாய் ஆய்வாளா் கோமதி, ஊத்துக்குளி கிராம நிா்வாக அலுவலா் பாரதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், நிலங்களைக் கண்டறிந்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வட்டாட்சியா் தெரிவித்தன்பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

அதேபோல செங்கப்பள்ளி, பல்லக்கவுண்டன்பாளையம், குன்னத்தூா் நில வருவாய் அலுவலா் அலவலகங்கள் முன்பாகவும் போராட்டம் நடைபெற்றது.

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை

பல்லடம் அருகே பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு பல்லடம் இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், குப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் உத... மேலும் பார்க்க