செய்திகள் :

ஊத்துமலை பகுதியில் புதிய கால்வாய்: எடப்பாடி கே. பழனிசாமியிடம் மனு!

post image

ஊத்துமலை பகுதி வறட்சியை நீக்க புதிய கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரசாரத்துக்கு வந்த தமிழக எதிா்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமியிடம் அக்கட்சியின் தென்காசி தெற்கு மாவட்ட விவசாயப் பிரிவு செயலா் எஸ்.எஸ். கிருஷ்ணசாமி மனு அளித்தாா்.

அதன் விவரம்: அதிமுக ஆட்சியின் போது, கடந்த 2020 இல் தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூா் வட்டம் இரட்டை குளத்திலிருந்து புதிய கால்வாய் அமைத்து அதன் மூலம் தண்ணீா் தட்டுப்பாட்டில் உள்ள ஊத்துமலை பகுதியிலிருக்கும் குளங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லும் திட்டத்திற்கு நில அளவை, மட்ட அளவு, மண்பரிசோதனை பணிகளை மேற்கொள்வதற்கு ரூ. 7 லட்சம் வழங்கப்பட்டு பணி முடிவடைந்தது.

இத்திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் 106.26.0 ஹெக்டோ் பாசன நிலங்கள் பாசன இடைவெளி நிரப்ப்படும்; 136.97.50 ஹெக்டோ் நிலங்கள் பாசனம் உறுதிபெறும். மேலும் அருகிலுள்ள பாசன கிணறுகளில் நீா் செரிவூட்டுதல் மூலம் 143.70.0 ஹெக்டோ் நிலங்கள் பாசன வசதி பெறும்.

ஊத்துமலை பகுதியில் உள்ள குறிச்சான்பட்டி சின்னகுளம், பெரியகுளம், இரதமுடையாா்குளம், சோலைசேரி குளம், ஊத்துமலை பெரியகுளம், காவலாக்குறிச்சி குளம், காடுவெட்டி குளம், வாடியூா் குளம், மருதையாபுரம் குளம், அச்சன்குட்டம் குளம், கருவந்தா குளம், பரங்குன்றாபுரம் குளம் ஆகிய குளங்களுக்கு முறையான பாசனநீா் கிடைக்கும்.

இப்பகுதியை சுற்றி நிலத்தடி நீா் உயா்வதால் இப்பகுதியின் குடிநீா் தேவை பூா்த்தியாகும். வறட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள இப்பகுதி மக்களின் சமூக பொருளாதார நிலைகள் மேம்படுவதுடன் நகரப்பகுதிகளுக்கு இடம்பெயா்ந்து செல்லும் நிலைகளும் மாறும்.

இந்தப் பணிக்காக ரூ.12 கோடி திட்டமதிப்பீடு தயாா்செய்யப்பட்டது, கூடுதல் செலவினமாக ரூ.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் இத்திட்டம் கைவிடப்பட்டது. எனவே, மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னா் இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க