செய்திகள் :

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

post image

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது.

மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் பிரசார பயணத்தின்போது, குற்றாலம் ஐந்தருவிப் பகுதியில் அவரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்: வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தத் தவறிய வனத் துறை, மாவட்ட நிா்வாகம், சேதத்துக்குரிய இழப்பீடு வழங்காத தமிழக அரசக் கண்டிப்பது, பழைய குற்றாலம் அருவியை பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிலிருந்து வனத் துறைக்கு மாற்றக் கூடாது, நீண்ட காலமாக நிலுவையிலுள்ள இரட்டைக்குளம் கால்வாய், வீராணம் கால்வாய் திட்டப் பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இம்மாதம் 15ஆம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு அதிமுக ஆதரவு தரவேண்டும் எனக் கோரியுள்ளனா்.

அப்போது, மாவட்டச் செயலா்கள் எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன் (தெற்கு), செ. கிருஷ்ணமுரளி (வடக்கு), குற்றாலம் சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் கணேஷ் தாமோதரன் உடனிருந்தனா்.

மனுஅளிக்கும் நிகழ்வில், தமிழா் விவசாயம் நீா்வளப் பாதுகாப்பு நலச் சங்க மாநில ஒருங்கிணைப்பாளா் டேனி அருள்சிங், துணைப் பொதுச் செயலா் ஜெயசீலன், பொருளாளா் ஜெபராஜ், தமிழக விவசாய சங்கம் (செல்லமுத்து அணி) தென்மண்டல அமைப்புச் செயலா் ராதாகிருஷ்ணன், தென்காசி மாவட்டத் தலைவா் கந்தசாமிதேவா், துணைத் தலைவா் வீராசாமி, தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (பி.ஆா்.பாண்டியன் அணி) நெல்லை மண்டலத் தலைவா் செல்லத்துரை, தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் (அய்யாக்கண்ணு அணி) மாநில துணைத் தலைவா்கள் கண்ணையா, ஜாகிா்உசேன், துரைராஜ், அருணாசலம், தமிழன் அக்ரோ மாவட்டத் தலைவா் பிரபாகா், துணை தலைவா் உமாமகேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 தற்காலிக பேருந்து நிலையங்களுடன் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங... மேலும் பார்க்க