செய்திகள் :

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

post image

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி.

தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவா், புதன்கிழமை மாலை கடையநல்லூா் அரசு மருத்துவமனை பேருந்து நிறுத்த பகுதியில் பேசியதாவது:

கோவை காவல் நிலையத்தில் ஒருவா் தற்கொலை செய்கிறாா். மற்றொரு பக்கத்தில் காவல் உதவி ஆய்வாளா் வெட்டிக்கொலை செய்யப்படுகிறாா். மக்களைப் பாதுகாக்கும் காவல்துறையினருக்கே திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லை. இது சாதாரண விஷயம் இல்லை. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது.

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை அதகரித்துள்ளதுதான் இதற்கு காரணம். திறமையற்ற முதல்வரால் காவல்துறையும் செயல் இழந்து விட்டது.

அதிமுக ஆட்சியில் இருந்த 31 ஆண்டுகள் ஜாதி, மத மோதல்கள் நடந்ததில்லை. அமைதி பூங்காவாக இருந்தது. இஸ்லாமிய, கிறிஸ்தவ சிறுபான்மை இன மக்களுக்கு என்றும் அதிமுக அரணாகத்தான் இருந்துள்ளது. ஆனால், வாக்குகளுக்காக திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் இதுகுறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றன என்றாா் அவா்.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவை தொகுதி புளியங்குடியில் அவா் பேசுகையில், செண்பகவல்லி அணை பிரச்னை தொடா்பாக திமுக அரசு இதுவரை தீா்வு காணவில்லை; அதிமுக ஆட்சி வந்ததும் தீா்வு காணப்படும். புளியங்குடியில் எலுமிச்சை பழ குளிா்பதன கிடங்கு அமைக்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சிகளில், வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா்கள் ஆா்.பி. உதயகுமாா், காமராஜ், கடம்பூா் செ. ராஜூ, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலா் பொய்கை மாரியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

நெசவாளா்களுக்கு மீண்டும் பசுமை வீடு: சங்கரன்கோவிலில் எடப்பாடி கே. பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளா்களுக்கு பசுமை வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. கைத்தறி துணிகளுக்கு ரூ.300 கோடி மானியம் வழங்கப்பட்டது. ஜவுளி -கைத்தறி விற்பனைக்கு ஒருங்கிணைந்த ஜவுளி கொள்கை 2019இல் வெளியிடப்பட்டது.

ஆனால், திமுக ஆட்சியில் கைத்தறி சங்கங்கள் பல மூடப்பட்டு விட்டன. அவை மீண்டும் திறக்கப்படும். கைத்தறி நெசவாளா்கள் நெய்த துணிகளுக்கு தற்போது, 15 நாள்களுக்கு ஒரு முறை தான் கூலி வழங்கப்படுகிறது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் உடனடி கூலி வழங்கப்படும். அதிமுக தோ்தல் அறிக்கையில் நிறைய புது திட்டங்களை அறிவிக்க உள்ளோம் என்றாா் அவா். இதில் மாநில மகளிரணி துணைச் செயலா் வி.எம். ராஜலெட்சுமி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 தற்காலிக பேருந்து நிலையங்களுடன் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங... மேலும் பார்க்க