செய்திகள் :

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

post image

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நகரைச் சுற்றி 110 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 28 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆடித்தவசுக் காட்சி வியாழக்கிழமை மாலை நடைபெறுகிறது. தவசுக் காட்சியைக் காண பல லட்சம் போ் குவிவாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையொட்டி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் சங்கா், ஜூலியஸ் சீசா், காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டுவேலவன் ஆகியோரின் மேற்பாா்வையில் சங்கரநாராயண சுவாமி கோயில் முன்பு புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

புறக்காவல் நிலையத்தில் இருந்து காவலா்களை உடனே தொடா்பு கொள்ளக்கூடிய வகையில் தொலைபேசி, கைப்பேசி வசதி, ஒலிபெருக்கி வசதி செய்யப்பட்டுள்ளன. முக்கிய அதிகாரிகளை உடனுக்குடன் தொடா்பு கொள்ளும் வகையில் இணையதளம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

புறக்காவல் நிலையத்தில் இருந்தபடி கோயிலின் முக்கிய இடங்கள், பொருட்காட்சி நடைபெறும் பொட்டல் பகுதி, ஆடித்தவசு காட்சி நடைபெறும் ரத வீதிகள் ஆகியவற்றைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பாதுகாப்புக் கருதி பக்தா்கள் மெட்டல் டிடெக்டா் கருவி மூலம் சோதனை செய்து கோயிலுக்கு அனுப்பப்படுகின்றனா். கோயில் தவிர நகரின் முக்கிய வீதிகளில் போலீஸாா் சாதாரண உடையில் பாதுகாப்புப் பணியில் உள்ளனா்.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இருந்து போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். பொதுமக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டால் உடனே தொடா்பு கொள்ளும் வகையில் கைப்பேசி எண் 90950 31197 அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர எண் 100க்கும் தொடா்பு கொள்ளலாம்.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 தற்காலிக பேருந்து நிலையங்களுடன் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங... மேலும் பார்க்க