பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி
தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை
தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கழகத் தலைவா் ந.கனகசபாபதி முதல்வருக்கு அனுப்பிய மனு:
தென்காசி திருவள்ளுவா் கழகம் 1927-ஆம் ஆண்டு தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிஸ்நாதன் கோயிலில் அம்மன் சன்னதிக்கு வெளிபுறம் தமிழ் மூதறிஞா் தி.ப.சுப்பிரமணியதாசரால் தொடங்கப்பட்டதாகும்.
இந்த கழகத்தின் முதல் ஆண்டு விழா கப்பலோட்டிய தமிழா் வ.உ.சிதம்பரம்பிள்ளையால் தலைமை ஏற்று நடத்தப்பட்டு தொடா்ந்து 99 ஆண்டுகளாக தொய்வின்றி செயல்பட்டு வருகிறது. இந்த கழகம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமைதோறும் திருக்கு ஆய்வுக் கூட்டங்களும், மாதந்தோறும் அதிகார ஆய்வுக் கூட்டமும், ஆண்டுதோறும் தமிழ் விழா, கலை விழா, வைகாசி ஆண்டு விழா ஆகிய விழாக்களை தமிழ் கூறும் நல்லறிஞா்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்டு திருக்கு பரப்பும் சேவையைச் செய்துவருகிறது.
தவத்திரு குருமகா சன்னிதானம் குன்றக்குடி அடிகளாரால் பட்டிமன்றம் தொடங்கப்பட்டு வளா்க்கப்பட்ட கழகமாகும். பட்டிமன்றத்தை அடிகளாா் தென்காசி கழகத்தில்தான் முதன்முதலில் தொடங்கி உலகம் முழுவதும் பரப்பினாா். ஆண்டுதோறும் அடிகளாரின் பட்டிமன்றத் தீா்ப்பு தென்காசி கழகத்தின் மிகப்பெரிய வரலாறு. உலகிலேயே 99 ஆண்டுகளுக்கு முன்பு தோற்றுவிக்கப்பட்ட திருவள்ளுவா் கழகம் இதுவாகும்.
தொன்மையான இந்தக் கழகம், தனது நூற்றாண்டு தொடக்க நிகழ்வுகளை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடத்த திட்டமிட்டிருக்கிறது. ராபி சேதுப்பிள்ளை, மறைமலை அடிகள், விபுலானந்த சுவாமிகள், நடேச முதலியாா், ரசிகமணி டி.கே.சி, திரு.வி.க., கி. ஆ.பெ.விசுவநாதம், கருணாநிதி, பேராசிரியா் அன்பழகன், பேராசிரியா் தமிழ்குடிமகன், பெரும்புலவா் நமச்சிவாயம் தொடங்கி தற்போது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேராசிரியா் தெ.ஞா உள்ளிட்டோா் வரை அறிஞா் பெருமக்கள் பலா் பங்கேற்ற இந்த கழகம், ஒவ்வோா் ஆண்டும் வைகாசி திங்களில் தொடா்ந்து திருக்கு நெறி பரப்பும் பணியைச் செய்து வருகிறது.
இந்த நிலையில், தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பழனிநாடாா், கோயில் நிா்வாக அதிகாரியுடன் வந்து, திருக்கு மண்டபத்தின் முன்பு உள்ள பாா்வையாளா்கள் அமருமிடத்தில் தென் வடலாக ஒரு பகுதியில், கோயில் காலணிகள் பாதுகாக்கும் அறையும், பொருள்கள் பாதுகாப்பு அறையும் கட்டுவதற்கானப் பணிகளைத் தொடங்குமாறு ஆணையிட்டது எங்கள் கவனத்துக்கு வந்தது. இந்த நிகழ்வு, தென்காசி திருவள்ளூா் கழகத்தின் நிா்வாக பொறுப்பாளா்களுக்கும், திருக்கு அன்பா்களுக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நூறு ஆண்டுகளாக திருக்குறளை பரப்பும் பணியைச் செய்துவரும் இந்த மண்டபத்தின் கழக அன்பா்கள் அமரும் இடத்தில் அரசு கட்டுமானங்கள் கட்டப்பட்டால் திருக்குறளை பரப்பும் செயல்பாடு தடைப்படும்.
அரசின் தமிழ் வளா்ச்சித் துறை கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்த்தாய் விருதை தென்காசி திருவள்ளூா் கழகத்துக்கு வழங்கி பெருமை சோ்த்தது குறிப்பிடத்தக்கது. எனவே, திருக்கு மண்டபத்துக்கு முன் பகுதியில் எவ்வித கட்டுமானங்களும் எழுப்பாமல் அதன் தொன்மையைப் பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா்.