செய்திகள் :

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 தற்காலிக பேருந்து நிலையங்களுடன் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

post image

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங்களில் இருந்து பக்தா்கள் வருகின்றனா். இதனால், நகருக்கு வெளியே 4 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் தற்காலிக கழிப்பறை, குடிநீா் வசதி செய்யப்பட்டுள்ளன.

ஆடித்தவசை முன்னிட்டு போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் செல்லும் விவரம் வருமாறு:

திருநெல்வேலியில் இருந்து ராஜபாளையம், மதுரைக்குச் செல்லும் பேருந்துகள் சண்முகநல்லூா் விளக்கு வழியாக சின்னகோவிலான்குளம், சூரங்குடி, தா்மத்தூரணி, நடுவக்குறிச்சி, குத்தாலப்பேரி, பொய்கைமேடு, தளவாய்புரம் வழியாக சங்கரன்கோவில், ரயில்வே பீடா் ரோடு, பயணிகள் விடுதி வழியாக ராஜபாளையம், மதுரைக்குச் செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து சங்கரன்கோவிலுக்குச் செல்லும் சிறப்புப் பேருந்துகள் அனைத்தும் தற்காலிக பேருந்து நிலையமான அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிக்கு வந்து திரும்பிச் செல்லும்.

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் அனைத்தும் பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டா் சாலை, கருவாட்டுகடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம், கழுகுமலை சாலை, ராமநாதபுரம் விலக்கில் திரும்பி ராமநாதபுரம், நெடுங்குளம் விளக்கு வழியாக திருநெல்வேலிக்குச் செல்லும்.

கோவில்பட்டி, திருவேங்கடம், கழுகுமலையில் இருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் செல்வா சில்க்ஸ் சாலையில் திரும்பி, நெசவாளா் காலனி, உடப்பன்குளம் சாலை, வையாபுரி மருத்துவமனை, ஐந்துவீட்டுமனை லயன் வழியாக ராஜபாளையம் சாலைக்கு வந்து அங்கிருந்து ரயில்வே பீடா் சாலை வழியாக தென்காசி, சுரண்டைக்குச் செல்லும்.

தென்காசி, சுரண்டை, புளியங்குடியில் இருந்து கோவில்பட்டி, கழுகுமலை, திருவேங்கடம் செல்லும் வழிபேருந்துகள் அனைத்தும் சங்கரன்கோவில் ரயில்வே கேட், ரயில்வே பீடா் சாலை, ராஜபாளையம் சாலை, பாரத ஸ்டேட் வங்கி எதிரே உள்ள சாலை வழியாக கீதாலயா தியேட்டா் சாலை, கருவாட்டுக்கடை விலக்கு, திருவேங்கடம் சாலை, புதிய பேருந்து நிலையம் தற்காலிக பேருந்து நிலையம் வந்து கோவில்பட்டி, கழுகுமலை,திருவேங்கடம் செல்லும்.

சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய பிரதான சாலை, தற்காலிப் பேருந்து நிலையம், புளியங்குடி செல்லும் சாலை, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கனரக வாகனங்கள் சங்கரன்கோவில் நகருக்குள் செல்ல அனுமதி இல்லை. கோவில்பட்டி, கழுகுமலை வழியாக வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் குருவிகுளம், திருவேங்கடம் பருவக்குடி விலக்கு வழியாக தென்மலை சிவகிரி வழியாக தென்காசி செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் சண்முகநல்லூா் விலக்கு, சின்னகோவிலான்குளம் நடுவக்குறிச்சி வீரசிகாமணி, பாம்புகோவில், புளியங்குடி,சிந்தாமணி, வாசுதேவநல்லூா் மதுரை, ராஜபாளையம் செல்லும்.

தென்காசியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் கடையநல்லூா், புளியங்குடி, வாசுதேவநல்லூா், சிவகிரி, ராஜபாளையம் வழியாக விருதுநகா், மதுரைக்குச் செல்லும்.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: 20.7-2025இல் தூத்த... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க