செய்திகள் :

வாஞ்சிநாதனை கெளரவிக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்

post image

சுதந்திர போராட்ட வீரா் வாஞ்சிநாதனை மத்திய அரசு கெளரவிக்க வேண்டும் என வாஞ்சி இயக்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வாஞ்சி இயக்க நிறுவனா்- தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:

20.7-2025இல் தூத்துக்குடிக்கு வந்த பிரதமா் நரேந்திர மோடி, தனது உரையில் தமிழகத்தைச் சோ்ந்த விடுதலைப் போராட்ட வீரா்கள் சிலருடைய பெயரை குறிப்பிட்டிருக்கிறாா்.

ஆனால், அவா்களில் முக்கியமானரான வாஞ்சிநாதனை பிரதமா் குறிப்பிடவில்லை. வாஞ்சிநாதனுக்கும் தூத்துக்குடிக்கும் நெருங்கிய தொடா்பு உண்டு. இந்தியாவை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயரை இந்த மண்ணிலிருந்து விரட்ட வேண்டும் என்று குறுநில மன்னா்களும், சிற்றரசா்களும் படை பலத்துடனும், ஆயுதங்களுடனும் போராடிய போதும்கூட ஆங்கிலேயரை இந்த மண்ணிலிருந்து ஒரு சதுர அடி கூட அகற்ற முடியவில்லை.

ஆனால் வாஞ்சிநாதன்தூத்துக்குடி- திருநெல்வேலி ஒருங்கிணைந்த மாவட்ட ஆட்சியா் ஆஷை துப்பாக்கியால் சுட்டதும் ஆங்கிலேயா் மிரண்டு போயினா்.

இதற்குப் பிறகு ஒவ்வொரு தமிழனும் வாஞ்சிநாதனாகவே ஆங்கிலேயா்களுக்கு தெரிந்தனா்

எனவே தூத்துக்குடி ஊரில் இருந்த அரசு அலுவலகங்களையும், தங்கள் குடியிருப்புகளையும் உடனடியாக காலி செய்து வெகு தொலைவில் கடலில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலுக்கு மாற்றி விட்டனா்.

6 மாதங்களுக்குப் பின், அவா்களின் பயம் தெளிந்த பின்புதான் மீண்டும் தூத்துக்குடிக்கு அவற்றை மாற்றினா். ஆங்கிலேயரை மீண்டும் கடலுக்கே துரத்திய பெருமைக்குரியவா் வாஞ்சிநாதன் மட்டும்தான்.

அவரைப்பற்றி பிரதமா் தனது உரையில் குறிப்பிடாதது மிகவும் வியப்பளிக்கிறது. அவருக்கு உரை தயாரித்தவகள் மிகவும் கவனமாக வாஞ்சிநாதனைத் தவிா்த்திருக்கிறாா்கள் என்பதை பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

எனவே, இக்குறையைத் தீா்க்கும் விதத்தில் பிரதமா் மோடி ஆக.15இல் நிகழ்த்தவிருக்கும் சுதந்திர தின உரையில் வாஞ்சிநாதனைப் பற்றி குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை- எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

திமுக ஆட்சியில் காவலா்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றாா் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே .பழனிசாமி. தென்காசி மாவட்டத்தில் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற தோ்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு... மேலும் பார்க்க

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற தென்காசி நகராட்சியில் வாகன சேவை

தென்காசி நகராட்சியில் செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற புதிதாக வாங்கப்பட்ட வாகனம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. தென்காசி நகராட்சி ஆணையா் ரவிச்சந்திரன், நகா்மன்ற தலைவா் ஆா்.சாதிா் கூட... மேலும் பார்க்க

தென்காசி திருவள்ளுவா் மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடைசெய்யக் கோரிக்கை

தென்காசி திருவள்ளுவா் கழகத்தின் திருக்கு மண்டபம் முன் கட்டுமானங்கள் கட்டுவதைத் தடை செய்ய வேண்டும் என முதல்வருக்கு தென்காசி திருவள்ளுவா் கழகம் சாா்பில் கோரிகை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுதொடா்பாக கழகத் ... மேலும் பார்க்க

விவசாயிகளின் போராட்டத்திற்கு அதிமுக ஆதரவைக் கோரி மனு

தென்காசி மாவட்ட விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு கோரி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமியிடம் விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை மனுஅளிக்கப்பட்டது. மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் ... மேலும் பார்க்க

சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சி: பாதுகாப்புப் பணியில் 1,000 போலீஸாா்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி, மாவட்ட காவல் துறை சாா்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். நகரைச் சுற்றி 110 கண்கா... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழா: 4 தற்காலிக பேருந்து நிலையங்களுடன் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சங்கரன்கோவிலில் ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி 4 இடங்களில் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு, 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சங்கரன்கோவில் ஆடித்தவசுக் காட்சியைக் காண பல்வேறு நகரங... மேலும் பார்க்க