செய்திகள் :

ஊரக வேலை திட்டம் நிறுத்தப்படாது: மத்திய அமைச்சர் விளக்கம்

post image

நமது நிருபர்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை (மன்ரேகா) நிறுத்தும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என்று மக்களவையில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.

சேலம் தொகுதி திமுக உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், "இத்திட்டத்திற்கு 2024-25 நிதியாண்டில் ரூ.86,000 கோடியும், 2025-26 -இல் ரூ.86,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடிமட்ட அளவில் வேலைவாய்ப்புக்கான தேவையை உன்னிப்பாகக் கண்காணித்து, தேவைப்படும்போது நிதி அமைச்சகத்திடமிருந்து கூடுதல் நிதி கோரப்படுகிறது.

எனவே மன்ரேகா திட்டத்தை நிறுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் அந்தப் பதிலில் தெரிவித்துள்ளார்.

நிலுவைத் தொகை: தேனி தொகுதி திமுக உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், "2024-2025 நிதியாண்டிற்கான மன்ரேகா திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள ரூ.4,034 கோடி நிலுவைத் தொகையை அரசு இன்னும் விடுவிக்கவில்லை என்பது உண்மையா?' என்று கேட்டிருந்தார்.

இதற்கு மக்களவையில் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கம்லேஷ் பாஸ்வான் அளித்துள்ள எழுத்துபூர்வ பதிலில், "தமிழகத்துக்கு நிலுவையில் உள்ள ஊதியப் பொறுப்பு ரூ.2884.16 கோடி 2025, ஏப்ரலில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

31.03.2025 நிலவரப்படி பொருள் கூறுகளுக்கான மொத்த நிலுவையில் உள்ள பொறுப்பான ரூ.858.66 கோடிக்கு எதிராக, நிலுவையில் உள்ள பொறுப்பில் 50 சதவீதம் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல் தகனம்

கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் உடல், புன்னப்ரா தியாகிகள் நினைவிடத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. திருவனந்தபுரத்தில் இருந்து பிற்பகல் வரவேண்டிய உடல், வழிநெடுக இருந்த கூட்டம் ... மேலும் பார்க்க

தில்லியில்... ஷேக் ஹசீனா கட்சியின் பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து!

தில்லியில், வங்கதேசத்தின் முன்னாள் ஆளும் கட்சியான அவாமி லீக் தலைவர்கள் திட்டமிட்டிருந்த பத்திரிகையாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா... மேலும் பார்க்க

மேற்கு வங்கத்தில் இரும்புப் பாலம் உடைந்து விபத்து!

மேற்கு வங்கத்தில் தண்ணீர் குழாய் செல்லும் இரும்புப் பாலம் உடைந்து விபத்துக்குள்ளானது. தாமோதர் நதியின் மீது பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள் மூலம் நகர்புறங்களுக்கான குடிநீர் அனுப்பப்படும் ந... மேலும் பார்க்க

மிசோரமின் அதிக வயதான பெண் மரணம்!

மிசோரமின் லாங்ட்லாய் மாவட்டத்தில், அம்மாநிலத்தின் அதிக வயதுடைய பெண் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது. லாங்ட்லாய் மாவட்டத்தின், பங்குவா கிராமத்தில் வசித்த வந்தவர் ஃபாமியாங் (வயது 117). இவர், கடந்த 1908-... மேலும் பார்க்க

ஜூலை 29 -ல் ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்! மோடி பங்கேற்பு

நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ஜூலை 29 ஆம் தேதி விவாதிக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. தொடர்ந்து, 16 மணிநேரம் நடைபெறும் விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க... மேலும் பார்க்க

அதீத கவனத்துடன் அனுப்பப்பட்ட உடல்கள்! பிரிட்டன் குடும்பத்தினர் புகார் மீது மத்திய அரசு பதில்

பிரிட்டன் நாட்டுக்கு, அதீத தொழில்பாங்குடன் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக, பிரிட்டன் நாட்டவரின் குற்றச்சாட்டக்கு, மத்திய வெளியுறவு விவகாரத் துறை விளக்கம் கொடுத்துள்ளது.ஏர் இந்தியா விமான விபத்தில் பலிய... மேலும் பார்க்க