செய்திகள் :

ஊழியர்கள் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும்: இன்ஃபோசிஸ் எச்சரிக்கை!

post image

நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவரும் நாள்தோறும் 9.15 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் எச்சரித்துள்ளது.

வாரத்திற்கு 70 மணிநேரம் பணிபுரிய வேண்டும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதனை அமல்படுத்தும் விதமாகவும், ஊழியர்களின் பணி நேரத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊழியர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் தனித்தனியாக மின்னஞ்சல் அனுப்பியுள்ளதாகவும், அதில், வாரத்தின் 5 வேலை நாள்களில் 9 மணிநேரம் 15 நிமிடங்கள் பணிபுரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

தொலைதூரத்தில், அதாவது வீடுகளில் இருந்து பணிபுரியும் சூழலிலும் இதனைக் கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. அவ்வாறு இல்லையெனில் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மின்னஞ்சலில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களின் பணிநேரமும் இனி கண்காணிக்கப்படும் என்றும், மாத இறுதியில் ஊழியர்களுக்கு இந்தத் தரவுகள் அனுப்பிவைக்கப்படும் எனவும் இன்ஃபோசிஸ் மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவித்துள்ளது.

பணி நேரம் கண்காணிப்பு

நாட்டின் இரண்டாவது பெரிய தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸில் 3,23,500 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது இவர்களின் மொத்த பணிநேரமும் கணக்கிடப்படவுள்ளது.

இந்த கணக்கீட்டில் பணிநேரம் அதிகமாக இருந்தால், அவையும் விரிவாக ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிவைக்கப்படும். தொலைதூரப் பணி, வீட்டில் இருந்து பணி, மொத்த பணி நேரம், நாளொன்றுக்கு சராசரி பணிநேரம் என அனைத்து தரவுகளும் கோப்புகளாக பராமரிக்கப்படும்.

நவம்பர் 2023-ல் திருத்தப்பட்ட நிறுவனத்தின் பணியிடக் கொள்கையின்படி, ஊழியர்கள் குறைந்தது 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

Infosys has warned that all employees of the company will have to work 9.15 hours a day.

ஜாதிய வலையில் பிகாா் அரசியல்!

இந்த ஆண்டின் நவம்பரில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஆயத்தமாகி வருகிறது பிகாா் மாநிலம். எதிா்பாா்ப்புகள் மற்றும் ஓயாத சிக்கல்கள் என இம்முறையும் இங்கு தோ்தலுக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பே பதற்றம் பரவிக்கி... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாடு: உலகத் தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளாா். பல்வேறு நாடுகளின் தலைவா்களைச் சந்தித்து அவா் பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். ப... மேலும் பார்க்க

பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகளில் மாற்றமில்லை: தோ்தல் ஆணையம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என்று தோ்தல் ஆணையம் தெரிவித்தது. அந்தப் பணிகளுக்கு படிவங்களை பூா்த்தி செய்தால் போதும், ஆவணங்கள் தேவையில்ல... மேலும் பார்க்க

ரயில் நிலைய நடைமேடையில் பெண்ணுக்குப் பிரசவம்! அவசர சிகிச்சை அளித்துக் காப்பாற்றிய ராணுவ மருத்துவா்!

உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா். பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவரு... மேலும் பார்க்க

தாய்மொழிக் கல்வி வாழ்வியலை வலுப்படுத்தும்: தலைமை நீதிபதி கவாய்

‘தாய்மொழிக் கல்வி கருத்தியல் புரிதலை அதிகரிப்பதோடு வாழ்வியலை வலுப்படுத்தும்’ என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் அவா் படித்த சிகித்ஸ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி பேசியவா் மீது தாக்குதல்! பாஜக கண்டனம்

மகாராஷ்டிரத்தில் ஹிந்தியில் பேசியவா் மீது உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே கட்சியினா் தாக்குதல் நடத்திய விடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்த... மேலும் பார்க்க