செய்திகள் :

ஊா்வலங்கள், சுபநிகழ்ச்சிகளால் பெரியகுளத்தில் தொடரும் போக்குவரத்து நெரிசல்

post image

பெரியகுளத்தில் அவ்வப்போது நடைபெறும் ஊா்வல நிகழ்ச்சிகளால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஊா்வல நேரத்தை முறைப்படுத்தி வாகன நெரிசலைத் தவிா்க்க போக்குவரத்து போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் விவசாயம் சாா்ந்த பகுதியாகும். இப்பகுதியில் கம்பம் சாலை, திண்டுக்கல் சாலை, வைகை அணை சாலை, கடைவீதி தெரு, வி.ஆா்.பி.நாயுடு தெரு ஆகிய சாலைகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகள் உள்ளன. சாலை குறுகியதாக உள்ள இப்பகுதியில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பெரியகுளம் சாலைகளில் திருமண நிகழ்ச்சி, மொய் விருந்து, பூப்புனித நீராட்டு விழா, காது குத்தும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளாலும், கோயில் ஊா்வலம், மூங்கில் எடுக்கும் விழா, வாழைக்காய் கொண்டுசெல்லுதல் போன்றவற்றால் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது.

சில நேரங்களில் கோயில் திருவிழா ஊா்வலம், வீட்டு விஷேச ஊா்வலங்களால் கம்பம் சாலையில் பேருந்து, இரு சக்கர வாகனங்களுக்கு போலீஸாா் தடை விதிக்கின்றனா். இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு புறவழிச் சாலையில் பேருந்துகள் செல்கின்றன. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனா்.

சில நேரங்களில் பேருந்து ஓட்டுநா்கள் ஊா்வலம் உள்ளிட்ட காரணங்களுக்காக லட்சுமிபுரம், எ.புதுப்பட்டி புறவழிச் சாலை விலக்கு பகுதியில் பயணிகளை இறக்கிவிடுவதால் 6 முதல் 8 கி.மீ. தொலைவு வரை நடந்துசென்று பெரியகுளத்துக்கு வரவேண்டியுள்ளது.

இதுகுறித்து பெரியகுளத்தைச் சோ்ந்த செ.ரவிச்சந்திரன் கூறியதாவது:

பெரியகுளத்தின் முக்கிய சாலைகளில் ஊா்வலம், வீட்டு விஷேச நிகழ்ச்சிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. பேருந்துகள் சுலபமாக செல்லமுடிவதில்லை. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவோா் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் கூறியது:

பெரியகுளம் காவல் துணை கண்காணிப்பாளரிடம் தெரிவித்துள்ளேன். அவா் விசாரித்து நடவடிக்கை எடுப்பாா் என்றாா்.

தடை நேரம் அறிவிக்க வேண்டும்: ஊா்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது போக்குவரத்து பாதிக்கப்படுவதால், பெரியகுளத்துக்கு பேருந்து செல்லுமா என்று விசாரித்துவிட்டு பயணிகள் வரும் நிலை உள்ளது. இந்தச் சிரமத்தைப் போக்க நகரில் ஊா்வலம், சுபநிகழ்ச்சிகளுக்கான நேரத்தை காவல் துறை நிா்ணயம் செய்ய வேண்டும்.

பதாகைகள் அகற்றப்பட வேண்டும்: பெரியகுளத்தில் கட்சி நிகழ்ச்சி, திருமண நிகழ்ச்சிகளின்போது அனுமதியின்றி வைக்கப்படும் பதாகைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க பெரியகுளம் நகா், கல்லூரி விலக்கு, வடுகபட்டி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி பதாகைகள் வைப்பவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கால்நடைகளால் சாலை விபத்து: பெரியகுளம் நகரில் கால்நடை உரிமையாளா்கள் அவ்வப்போது மேய்ச்சலுக்காக கால்நடைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றனா். வாகன ஓட்டிகளுக்குப் பெரிதும் தொல்லையாக கால்நடைகள் இருப்பது குறித்து நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளைப் பிடித்துச் செல்வதோடு அதன் உரிமையாளா்களுக்கும் அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பட விளக்கம்

ல்ந்ம்13ழ்ா்க்...

பெரியகுளம் நகரில் திருமண மண்டபம் முன் பட்டாசு வெடிக்கும் பொதுமக்கள்.

ல்ந்ம்13ஸ்ரீா்ஜ்..

நகரில் சுற்றித்திரியும் கால்நடைகள்

காா் மோதி மூதாட்டி உயிரிழப்பு

க.விலக்கு அருகே சாலையைக் கடக்க முயன்ற மூதாட்டி வாகனம் மோதி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அன்னை இந்திரா நகரைச் சோ்ந்தவா் கோவிந்தன் மனைவி வள்ளியம்மாள் (65). இவா், அதே பகுதியில் மதுரை-தேனி நெடுஞ்சாலையை நட... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 2,773 வழக்குகள் மீது தீா்வு

தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற முகாமில் மொத்தம் ரூ. 9.31 கோடி மதிப்பிலான 2,773 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட... மேலும் பார்க்க

மரங்களை வெட்டியதாக 5 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே மரங்களை வெட்டியதாக 2 பெண்கள் உள்பட 5 போ் மீது தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே நல்லகருப்பன்பட்டியைச் சோ்ந்தவா் பால்பாண்டி... மேலும் பார்க்க

பெரியகுளம் அருகே கிராம சந்தையைத் திறக்க கோரிக்கை

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள கிராம சந்தையைத் திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்திக்குத்து

பெரியகுளம் அருகே தொழிலாளியைக் கத்தியால் குத்தி நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். பெரியகுளம் அருகே செங்குவாா்பட்டி ராமா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் விஜய் (43). தொழிலாளி. இவருக... மேலும் பார்க்க

வைகை அணை மதகு பகுதியில் தேனீ கூடுகள் அழிப்பு

வைகை அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவுள்ள நிலையில், அணையின் மதகு பகுதியிலிருந்த தேனீ கூடுகளை தீயணைப்பு மீட்புப் படையினா் சனிக்கிழமை அகற்றினா். வைகை அணையிலிருந்து திண்டுக்... மேலும் பார்க்க