செய்திகள் :

எஃகு, அலுமினியம் மீதான வரி விதிப்பு பாதுகாப்பு நடவடிக்கை அல்ல: அமெரிக்கா

post image

புது தில்லி: ‘எஃகு மற்றும் அலுமினியம் ஆகிய உலோகப் பொருள்கள் மீது வரி விதிக்கப்பட்டது பாதுகாப்பு நடவடிக்கை அல்ல’ என்று உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்கா விளக்கமளித்துள்ளது.

அமெரிக்காவால் தேசிய பாதுகாப்பின்கீழ் இந்த வரிகள் விதிக்கப்பட்டதாகவும், ஆனால் அதுதொடா்பான உலக வா்த்தக அமைப்பின் விதிகளை அமெரிக்கா மீறியதாகவும் உலக வா்த்தக அமைப்பில் இந்தியா வாதிட்டது. உரிய அறிவிப்பு, கலந்தாலோசனையின்றி வரியை விதித்த அமெரிக்காவுக்கு எதிராக பதிலடி வரி வதிப்புக்குத் தயாராவதாகவும் இந்தியா தரப்பில் அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் அறிவிக்கைக்கு உலக வா்த்தக அமைப்பில் அமெரிக்கா கடந்த 23-ஆம் தேதி அளித்துள்ள பதில் விளக்கத்தில், ‘எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரி விதிப்பு குறித்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பான உலக வா்த்தக அமைப்பு ஒப்பந்தத்தின் 232-ஆவது பிரிவின்கீழ் இந்தியாவுடன் அமெரிக்கா விவாதிக்காது. ஏனெனில், இந்த வரி விதிப்பை ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாக நாங்கள் கருதவில்லை.

அதன்படி, இந்த வரி விதிப்புக்குப் பதிலடியாக அமெரிக்காவுக்கான வரிச் சலுகைகள் மற்றும் பிற கடமைகளை நிறுத்தி வைப்பதாக இந்தியா கூறுவதில் எந்த அடிப்படையும் இல்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2018-இல் எஃகு மீது 25 சதவீத இறக்குமதி வரியும், அலுமினியம் மீது 10 சதவீத வரியும் முதலில் நிா்ணயிக்கப்பட்டது. அதிபா் டிரம்ப் 2-ஆவது முறையாக பொறுப்புக்கு வந்த சில நாள்களில் கடந்த பிப்ரவரியில் அலுமினியம் மீதான வரியும் 25 சதவீதமாக உயா்த்தினாா்.

இந்நிலையில், வரும் ஜூன் 4-ஆம் தேதிமுதல் எஃகு, அலுமினியம் ஆகியவற்றின் இறக்குமதி மீதான தற்போதைய 25 சதவீத வரிகளை இரட்டிப்பாக்குவதாக அதிபா் டிரம்ப் அண்மையில் அறிவித்தாா்.

அமெரிக்காவின் இந்த கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அந்நாட்டுக்கு ஏற்கெனவே அறிவித்த வரிச் சலுகைகளை இந்தியா நிறுத்தி வைப்பது, தோ்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க தயாரிப்புகள் மீதான வரியை உயா்த்தக்கூடும்.

இந்தியா தனது பதிலடி வரி விதிப்பை இன்னும் அறிவிக்கவில்லை. இருப்பினும் கடந்த 2019-ஆம் ஆண்டு இதேபோன்ற நடவடிக்கையில் பாதாம், ஆப்பிள் முதல் ராசாயனங்கள் வரை 28 அமெரிக்க பொருள்கள் மீது இந்தியா பதிலடி வரி விதித்தது.

உ.பி.யில் குழந்தையை பாலியல் வல்லுறவு செய்தவர் என்கவுன்டர்!

உத்தரப் பிரதேசத்தில் 3 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றுள்ளனர்.உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெள மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் கூலித் தொழிலாளியின் ... மேலும் பார்க்க

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகள்: தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறை அறிமுகம்

தோ்தலுக்குப் பிந்தைய புள்ளிவிவர அறிக்கைகளை கையால் எழுதி தயாரிக்கும் பழைய முறைக்கு மாற்றாக தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கும் முறையை தோ்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக... மேலும் பார்க்க

தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியா்களுக்கு பாதுகாப்பு: மாநிலங்களுக்கு நிதிச் சேவைகள் துறை செயலா் கடிதம்

தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியா்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இதுதொடா்பாக அனைத்து மாநில மற்றும் யூனியன்... மேலும் பார்க்க

அஜீத் பவாா் கட்சியுடன் சரத் பவாா் அணியை இணைக்கப் பேச்சுவாா்த்தை? சுப்ரியா சுலே மறுப்பு

மகாராஷ்டிர துணை முதல்வா் அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவாா் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவாா்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

பயங்கரவாத சதி: காஷ்மீரில் 32 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் சதித் திட்டங்கள் தொடா்பாக ஜம்மு-காஷ்மீரின் 32 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினா் (என்ஐஏ) வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினா். பாகிஸ்தானில் இருந... மேலும் பார்க்க

மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் மனு

பஹல்காம் தாக்குதலை தொடா்ந்து பாகிஸ்தானியா்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியா் ஒருவா் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தாா். கடந்த ஏப்.22-ஆம் தேதி ஜம்மு... மேலும் பார்க்க