செய்திகள் :

எங்கள் கோரிக்கையில் இது கட்டாயம் இடம்பெறும்' - உக்ரைனுடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா

post image

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த மும்முரமாக செயல்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

கடந்த வாரம் நடந்த அமெரிக்கா - உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் '30 நாட்கள் உடனடி போர் நிறுத்த'த்திற்கு ஒப்புக்கொண்டது உக்ரைன் அரசு. இதனையடுத்து ரஷ்யாவிற்கு பயணமானார்கள் அமெரிக்க அதிகாரிகள். அங்கேயும் கிட்டதட்ட பச்சை கொடி தான்.

போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்து கடந்த வாரம் ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார்.

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யும் அமெரிக்கா!

அமெரிக்கா - ரஷ்யா போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசும்போது, "போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, உக்ரைன் நேட்டோ படையில் சேரக்கூடாது என்பதை கட்டாயம் கேட்போம்" என்று கூறியுள்ளார். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இந்தப் போரின் ஆரம்பமே, உக்ரைன் நேட்டோ படையில் சேர வேண்டும் என்றதால் தான். ஆக, போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டால், இது ஒரு மிக முக்கிய கோரிக்கையாக இருக்கும்.

போர் நிறுத்தம் குறித்து இந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் தொலைப்பேசியில் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Canada: கனடாவின் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளி பெண்கள்; யார் இவர்கள்?

கனடாவின் புதிய பிரதமர்கார்னியின்அமைச்சரவையில் அனிதா ஆனந்த் பொருளாதார முன்னேற்றம், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான (Innovation) அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கமலா கேரா சுகாதாரத்துறை அமைச்சராக இட... மேலும் பார்க்க

America: வெனிசுலா மக்களைச் சிறையிலடைத்த அமெரிக்கா; "கடைசியாக போனில் பேசும்போது.." - ஒரு தாயின் அழுகை

அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் குடியேறியவர்களை வெளியேற்றும் நிகழ்வு தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. இது இதற்கு முன்னரும் நடந்திருந்தாலும், அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதற்குப் பின்னர், ... மேலும் பார்க்க

Railway Exams: தமிழகத் தேர்வர்களுக்கு வெளிமாநிலத்தில் மையம்; ரயில்வே சொல்லும் காரணம் என்ன?

ரயில்வே தேர்வு வாரியம் (RRB) மூலம் நடத்தப்படும் ஏ.எல்.பி (Assiaitant Loco Pilot) பணிக்கான தேர்விற்கு விண்ணப்பித்த தமிழகத்தைச் சேர்ந்த 80 சதவீதம் தேர்வர்களுக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்ப... மேலும் பார்க்க

Aurangzeb: "பட்னாவிஸ் ஒளரங்கசீப்பைப் போல..." - காங். தலைவர் பேச்சு; மகாராஷ்டிராவில் வெடித்த சர்ச்சை

மொகலாய மன்னர் ஔரங்கசீப் தனது கடைசிக் காலத்தில் மகாராஷ்டிராவில்தான் வாழ்ந்து மறைந்தார். அவரது உடல் தற்போது சாம்பாஜி நகர் மாவட்டத்தில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது கல்லறையை அகற்ற வேண்டும் என்ற க... மேலும் பார்க்க

கல்வி, வேலைவாய்ப்பு, சொத்துடைமை... இந்தியாவில் இஸ்லாமியர் நிலை பற்றிய புதிய அறிக்கை சொல்வது என்ன?

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கான அரசின் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்து ’Rethinking Affirmative Action for Muslims in Contemporary India’ என்ற அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத சிறுபான்மையினரின் பொருளாத... மேலும் பார்க்க

``ராஜேந்திர பாலாஜி வழக்கு விசாரணையை ஆளுநர் வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறார்" - உச்ச நீதிமன்றம்

அதிமுக ஆட்சிக் காலத்தில் (2016 - 2021) தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் பல்வேறு முறைகேட்டில் ஈடுபட்டு மூன்று கோடி ரூபாய் வரை சேர்த்ததாகப் புகார்கள் எழுந்தது... மேலும் பார்க்க