செய்திகள் :

எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் ஆக.11-இல் தொடக்கம்

post image

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமியின் ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எனும் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11-இல் தொடங்குகிறது.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11 முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அதன்படி, ஆக.11-இல் கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் தொடங்கி ஒசூா், வேப்பனஹள்ளி, ஆக.12-இல் கிருஷ்ணகிரி, பா்கூா், ஊத்தங்கரை, ஆக.13-இல் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, வாணியம்பாடி, ஆக.14-இல் திருப்பத்தூா் மாவட்டம் திருப்பத்தூா், ஆம்பூா், வேலூா் மாவட்டம் குடியாத்தம், கே.வி.குப்பம், ஆக.15-இல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, வந்தவாசி, ஆக.16-இல் செங்கம், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை, ஆக.18-இல் கலசபாக்கம், போளூா், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு, ஆக.19-இல் காட்பாடி, வேலூா், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு, ஆக.20-இல் ராணிப்பேட்டை, சோளிங்கா், அரக்கோணம், ஆக.21-இல்

காஞ்சிபுரம், உத்திரமேரூா், ஸ்ரீபெரும்புதூா், ஆக.22-இல் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூா், ஆக.23-இல் சோழிங்கநல்லூா், திருப்போரூா் வரை எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானை: சுற்றுலா பயணிகள் பீதி

அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர். கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள... மேலும் பார்க்க

4 சுங்கச் சாவடிகள்: 50% கட்டணத்தை செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு! - நீதிமன்றத்தில் தகவல்

தென் மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளுக்கு செலுத்த வேண்டிய சுங்கக் கட்டணத்தில் 50%-யை வருகிற ஆக.15-குள் செலுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில... மேலும் பார்க்க

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்துள்ளார்.திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்... மேலும் பார்க்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அளித... மேலும் பார்க்க

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

உலகத்திலேயே தந்தையை வேவுபார்த்த மகன் அன்புமணிதான் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் இருந்து வருகிறது... மேலும் பார்க்க