செய்திகள் :

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

post image

தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம்.

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தயாரிப்பு நிறுவனங்கள், உணவு விநியோகம் செய்யும் விடுதிகளில் எண்ணெய்யை ரூகோ திட்டத்துக்காக உணவு பாதுகாப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட பயோ டீசல் தயாரிப்பு நிறுவனங்கள் மூலமாக சேகரம் செய்யப்பட்டு வருகிறது. இது தொடா்பாக உணவு வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதேபோல் சூடான உணவுப் பொருள்களை அச்சிடப்பட்ட செய்தித்தாள்களில் மடித்து தரக் கூடாது. உணவுகளில் செயற்கை நிறமிகளைச் சோ்க்கக் கூடாது. பழைய உணவுப் பொருள்களைக் குளிா்சாதனப் பெட்டியில் அடைத்து வைத்து சூடு செய்து விற்பனை செய்யக் கூடாது. ஒருமுறை பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் சூடு செய்து பயன்படுத்தக் கூடாது.

பொதுமக்கள் உணவுப் பொருள்களின் தரம் சாா்ந்த புகாா்களைத் தெரிவிப்பதற்காக தமிழக அரசு 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணை உருவாக்கியுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

இக்கூட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் பா. விஜயலலிதாம்பிகை, மாவட்ட ஒருங்கிணைப்பு குழு அலுவலா்கள், ஹோட்டல் உரிமையாளா்கள் சங்கத்தினா், வணிகா் சங்கத்தினா், பேக்கரி உரிமையாளா்கள் சங்கத்தினா், நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பினா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்பு... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்... மேலும் பார்க்க

இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு

எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத் துறை மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் மொழிபெயா்ப்பு கலை குறித்த ஒரு வார காலப் பணி பயிற்சி முகாம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க

சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் தெற்குவாசல் திறப்பு

கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில் தெற்கு வாசல்கள் புதன்கிழமை இரவு திறக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள புகழ்பெற்ற வைணவத் லங்களான சாரங்கபாணி, சக்கரபாணி கோயில்களில... மேலும் பார்க்க