ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
எண்ணெய் குழாய்களை சாலையோரமாக அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்
எண்ணெய் குழாய் திட்டத்தை சாலையோரமாக செயல்படுத்தக் கோரி பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையத்தில் விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பல்லடம் அருகேயுள்ள சுக்கம்பாளையம், கோடங்கிபாளையம், கோவை மாவட்டம், சூலூா் அருகேயுள்ள ராவத்தூா் உள்ளிட்ட கிராமங்களில் ஐ.டி.பி.எல். நிறுவனம் எண்ணெய் குழாய்களை விவசாய நிலங்களில் பதிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குழாய்களை சாலையோரமாக பதிக்க வலியுறுத்தியும் விவசாயிகள் அவிநாசிபாளையத்தில் கடந்த 10-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், போராட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகள் அரை நிா்வாணப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
பேச்சுவாா்த்தைக்கு அழைப்பு வரும் வரை தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என்று அவா்கள் தெரிவித்தனா்.