செய்திகள் :

எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்க மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது: அமித் ஷா

post image

புது தில்லி: எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவே மொழிப் பிரச்னை விஸ்வரூபமாக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் அதைச் சார்ந்த மும்மொழிப் பிரச்னை குறித்து மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று(மார்ச் 21) பேசியதாவது:

“ஒரு சிலர், ஒரு சில கட்சிகள், தங்கள் சொந்த அரசியல் ஆதாயத்துக்காக மொழிப் பிரச்னையை எழுப்புகின்றனர். இதன்மூலம், அரசியல் ரீதியாக ஆதாயம் தேடிக்கொள்வது மட்டுமல்லாது, தம் மீதான ஊழல் குற்றங்களை அவர்கள் மறைக்க முயற்சிக்கின்றனர்.

தாம் செய்துள்ள ஊழலை மூடி மறைப்பதற்காக மொழிப் பிரச்னையை எழுப்பி, அதன்பின் குளிர்காய்வோருக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை இது. நாட்டில் மொழியின் பெயரால் போதும்போதும் என்கிற அளவுக்கு ஏகப்பட்ட பிரிவினைகள் ஏற்கெனவே நிலவுகின்றன. எனவே, இனிமேலும், இது போல நிகழக்கூடாது.

ஹிந்தி பிற மொழிகளுக்கு தோழமை மொழியே; இந்தியாவிலுள்ள எந்தவொரு மொழிக்கும் போட்டியல்ல.

மோடி அரசு, இந்திய மொழிகளுக்கான துறையை நிறுவியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், அனைத்து இந்திய மொழிகளையும் பரப்ப நடவடடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, அஸ்ஸாமி இப்படி ஒவ்வொரு மொழியையும் இணைத்து நடவடடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்றார்.

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உ... மேலும் பார்க்க

ஏப். 1 முதல் யுபிஐ சேவை நிறுத்தம்!

செயலற்ற நிலையில் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அறிவித்துள்ளது.யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள்வரையில் செயலற்றதாக இருந்தால், அதன... மேலும் பார்க்க

திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்களுக்கு மட்டுமே பணி: முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்று தெளிவுபடுத்தியுள்ள ஆந்திரம் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு, பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் தற்போது கோயிலில் பணிபுரிந... மேலும் பார்க்க

தில்லி நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு!

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் சர்மா விவகாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின்றன.தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் சர்மாவின் வீட்டில், கணக்கில் வராத பணம் பறிமு... மேலும் பார்க்க

நதிநீா் இணைப்பு: மாநிலங்களிடையே கருத்தொற்றுமை உருவாக்க முயற்சி: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்

‘நதிநீா் இணைப்பு திட்டங்கள் தொடா்பாக மாநிலங்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய ஜல் சக்தி அமைச்சா் சி.ஆா்.பாட்டீல் தெரிவ... மேலும் பார்க்க

நாட்டில் நிலக்கரி உற்பத்தி 1 பில்லியன் டன்களைக் கடந்தது!

நாட்டில் நடப்பு நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி முன்னெப்போதும் இல்லாத அளவில் 1 பில்லியன் (100 கோடி) டன்களைக் கடந்துள்ளது. இது, ஒட்டுமொத்த நாட்டுக்கும் பெருமைக்குரிய தருணம் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித... மேலும் பார்க்க