எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை: ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடு என தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
தொழிலாளர் நாளான இன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே நாள் பூங்காவில் உள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மரியாதை செலுத்தினார்.
ரூ.73,750 சம்பளத்தில் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
பின்னர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:
தமிழகம் எப்போதும் அடுத்த கட்ட தொழில்நுட்பத்தை வளரும் தலைமுறை ஏற்றுகொள்ளவார்கள். ஏஐ உள்ளிட்ட எத்தகைய தொழில்நுட்பம் வந்தாலும் அதற்கேற்ப தமிழக இளைஞர்கள் தகவமைத்து கொள்வார்கள். இதுதான் மற்ற மாநிலத்திற்கு தமிழகத்திற்கு உள்ள வேறுபாடாகும்.
தமிழகம் எப்போதும் முன்னோடியாகும், அடுத்த பத்தாண்டுக்கு தேவையான வகையில் நமது மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். இதற்காக தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் திறன்மேம்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் புதிய தொழில்நுட்பத்தின் பயத்தை போக்கும் வகையிலான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெருக்கும் வகையில் தோழி அமைப்பு செயல்படுத்துகிறது தமிழக அரசு என்று கூறினார்.