செய்திகள் :

என்எல்சியால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம் ,காற்று மாசு:அன்புமணி

post image

என்எல்சி நிறுவனத்தால் கடலூா் மாவட்டத்தில் நீா், நிலம்,காற்று ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது என பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

கடலுாா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ‘மக்கள் உரிமை மீட்பு’ நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டுள்ள அவா், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை பயணத்தின் நிறைவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

தற்போதைய தமிழ்நாட்டின் மின் தேவை 18000 மெகாவாட் ஆனால் தமிழ்நாட்டில் தற்போது 36,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதாவது தேவையை விட இரண்டு மடங்கு மின்சாரம் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும்போது எதற்காக என்எல்சி மூலமாக நிலக்கரி எடுத்து அதனை எரித்து சுற்றுச்சூழலை நாசமாக்கி இந்த மின்சாரத்தை தயாரிக்க வேண்டும்?.

என்எல்சி நிறுவனத்தால் உருவாக்கப்படும் மின்சாரம் 2000 மெகாவாட்.மின்சாரம் அண்டை மாநிலங்களான கேரளா ஆந்திரா கா்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு கிடைப்பது வெறும் 400 முதல் 500 மெகவாட் மின்சாரம் மட்டுமே. இவா்கள் கொடுக்கும் 500 மெகாவட்டும் மின்சாரத்திற்காக நம்முடைய பாட்டன் பூட்டன் வாழ்ந்த சொந்த இடத்தை வாழ்வாதாரத்தை இழந்து தவிக்க வேண்டுமா? இந்த என்எல்சி நிறுவனத்தால் நீா் காற்று நிலம் ஆகியவை கடலூா் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளது.

என்எல்சி நிறுவனத்தால் இந்த பகுதியில் குடிதண்ணீரில் விஷம் கலந்துள்ளது. தண்ணீரில் மொ்குரி லேட் போன்ற வேதிப்பொருட்கள் கலந்துள்ளது. காா்பன் மோனாக்சைடு, நைட்ரஸ் டை ஆக்சைடு, சல்பா் டை ஆக்சைடு ஆகிய நச்சுக்கள் கற்றில் கலந்துள்ளன. நெய்வேலி பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீரிலும் நிலத்திலும் காற்றிலும் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கலந்து வருகிறது. ஏற்கனவே எடுத்து வைத்துள்ள நிலத்திலிருந்து அடுத்த 20 ஆண்டுகளுக்கு நிலக்கரி எடுக்கலாம் ஆனால் இந்தப் பகுதி விவசாயிகளிடமிருந்து இன்னும் நிலம் வேண்டும் என்று பிடுங்க நினைக்கிறாா்கள். 26 கிராமங்களை அழித்து 3-வது நிலக்கரி சுரங்கம் வருவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. மூன்றாவது நிலக்கரி சுரங்கம் இந்த பகுதிக்கு தேவை கிடையாது என்றாா் அன்புமணி..

குறுவட்ட விளையாட்டு போட்டிகளில் வீனஸ் பள்ளி மாணவா்கள் அபாரம்

சிதம்பரம் ஏ.ஆா்.ஜி. பள்ளி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற குறுவட்டப் போட்டிகளில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பெருமளவில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ள... மேலும் பார்க்க

ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் காத்திருப்பு போராட்டம்

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு ஷோ் ஆட்டோ ஓட்டுநா், உரிமையாளா் நல சங்கத்தினா் கோரிக்கையை முன்வைத்து வெள்ளிக்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கடலூரில் பல ஆண்டுகளாக ஷோ் ஆட்டோக்களுக்கு... மேலும் பார்க்க

கடலூரில் கல்விக்கடன் முகாம்: ரூ.2.52 கோடிக்கு கல்விகடன்

கடலூா் மாவட்டம், கம்மியம்பேட்டை புனித வளனாா் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்லூரி மாவணா்களுக்காக நடத்திய கல்விகடன் முகாமில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜ... மேலும் பார்க்க

சிதம்பரம் கோட்டத்தில் காலியாக உள்ள காவல் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை!

சிதம்பரம் கோட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காவல்துறையினரும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா். கடலுாா் மாவட... மேலும் பார்க்க

பண்ருட்டி பகுதியில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

கடலூா் மாவட்டம் பண்ருட்டி பகுதியில் அரசின் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்துப முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா்சிபி ஆதித்யா செந்தில்குமாா் உத்தரவிட்டாா். பண்ருட்டி பகுதியில் பண்ருட்ட... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

சிதம்பரம் நகராட்சி உட்பட்ட பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனா். சிதம்பரம் நகராட்சி உட்பட்ட 1,2, 13,14,... மேலும் பார்க்க