செய்திகள் :

எப்போதும் மகிழ்ச்சியான பிரதமரை பஹல்காம் தாக்குதல் மாற்றி விட்டது: சந்திரபாபு நாயுடு

post image

பயங்கரவாதத்தை ஒடுக்கும் பிரதமரின் நடவடிக்கைகளில் ஒட்டுமொத்த துணை நிற்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமராவதி நகரை மறுஉருவாக்கம் செய்யும் திட்டப்பணிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். மேலும், ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களையும் தொடக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது, ``பிரதமர் மோடிதான், இந்தியாவுக்கான சரியான தலைவர். அவர் பொதுவாகவே மிகவும் மகிழ்ச்சியான மனிதர். ஆனால், அத்தகைய மகிழ்ச்சியான நிலையில் இருந்தவரை தீவிர மனநிலைக்கு பஹல்காம் தாக்குதல் மாற்றியது.

பயங்கரவாதத்தை எதிர்க்கும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசுடன் ஆந்திர மக்கள் 5 கோடி பேர் உள்பட, ஒட்டுமொத்த நாடும் அவருடன் துணை நிற்கிறது’’ என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க:டிரம்ப் 100 நாள்கள்! நூற்றுக்கு நூறு பெற்றாரா?

பாக். மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவேன் - காங். அமைச்சர் ஆவேசம்!

பெங்களூரு: பாகிஸ்தான் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக கர்நாடக அமைச்சர் ஸமீர் அகமது கான் ஆவேசமாக பேசியிருக்கிறார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத தாக்குதல் ... மேலும் பார்க்க

அரசு நிகழ்ச்சியில் பவன் கல்யாணுக்கு இருமல் மிட்டாய் கொடுத்த பிரதமர் மோடி

ஆந்திரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு பிரதமர் மோடி இருமல் மிட்டாய் கொடுத்தார்.ஆந்திர பிரதேசத்தில் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவது உள்ளிட்ட ரூ.58,000 கோடி மத... மேலும் பார்க்க

இந்தியா அணை கட்டினால் அழித்து விடுவோம்! பாகிஸ்தான் அமைச்சரின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

சிந்து நதிப் படுகையில் அணை கட்டினால், அழித்து விடுவோம் என்று கூறிய பாகிஸ்தான் அமைச்சருக்கு பாஜக தலைவர் பதிலடி கொடுத்துள்ளார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது பல்வேறு நடவடிக்கைகளை... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் போர் தீர்வல்ல: நடிகை திவ்யா

பஹல்காம் தாக்குதலுக்கு போர் தீர்வல்ல என்று நடிகை திவ்யா ஸ்பந்தனா கருத்து கூறியுள்ளார்.பெங்களூரில் காங்கிரஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் முன்னாள் தலைவரும் நடிகையுமான திவ்யா ஸ்பந்தனாவிடம் பஹல்காம் பயங்... மேலும் பார்க்க

கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, மறுநாளே தேர்வெழுதச் சென்ற மாணவி!

ராஜஸ்தானில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி, மறுநாளே முன்வந்து தேர்வெழுதிய நிகழ்வு வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஜலாவர் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு, திருமண நிகழ்வுக்குச் சென்ற ... மேலும் பார்க்க

ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் ஒருவர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கரியாபாந்து மாவட்டத்த... மேலும் பார்க்க