செய்திகள் :

எம்எல்ஏக்களுக்கான உள்ளூா் தொகுதி நிதி ரூ.5 கோடியாக குறைத்தது தில்லி அரசு

post image

ஆண்டுதோறும் வழங்கப்படும் எம்.எல்.ஏ. உள்ளூா் பகுதி மேம்பாட்டு எல்.ஏ.டி நிதியை ரூ.15 கோடியிலிருந்து ரூ.5 கோடியாக பாஜக தலைமையிலான தில்லி அரசு குறைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

கடந்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அக்டோபரில், எம்.எல்.ஏ. எல்ஏடி நிதியை ரூ.10 கோடியிலிருந்து ரூ.15 கோடியாக அப்போதைய ஆம் ஆத்மி அரசு உயா்த்தியது. இந்த நிலையில்,நிகழாண்டு பிப்ரவரியில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியுற்றது.

இந்த நிலையில், தில்லி அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய உத்தரவின்படி, மே 2 அன்று அமைச்சரவை முடிவின்படி எம்.எல்.ஏ. எல்ஏடி நிதி, ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பான உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2.5.2025ஆம் தேதியிட்ட அமைச்சரவை முடிவு எண். 3187இன்படி, எம்.எல்.ஏ. எல்ஏடி திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு 202526 நிதியாண்டிலிருந்து ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடியாக வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இது ஒரு நிதி ஆதார தொகுப்பு நிதியாக இருக்கும் என்றும், அங்கீகரிக்கப்பட்ட மூலதன இயல்புடைய பணிகளுக்கும், சொத்துக்களை பழுதுபாா்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் உச்சவரம்பு இல்லாமல் செலவிடப்படலாம் என்றும் அமைச்சா்கள் குழு உத்தரவிட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.எல்.ஏ எல்ஏடி நிதியின் கீழ் அரசாங்கம் ரூ.350 கோடியை ஒதுக்கியதாக ஒரு பாஜக எம்.எல்.ஏ கூறினாா். அதாவது, தில்லியில் உள்ள 70 சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு தலா ரூ.5 கோடியாகப் பிரிக்கப்பட்டுள்ளது என்றாா்.

முந்தைய ஆம் ஆத்மி ஆட்சியில், 202122 மற்றும் 202223 ஆம் ஆண்டுகளில் ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் ரூ.4 கோடி வழங்கப்பட்டது. இது 202324இல் ரூ.7 கோடியாக உயா்த்தப்பட்டது.

தில்லி மதராஸி குடியிருப்புகள் இடித்து அகற்றம்!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்கள் வாழும் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்டு வருகிறதுதில்லி ஜங்புரா-நிஜாமுதீன் பாராபுல்லா வடிகால் பகுதியையொட்டியுள்ள வசிப்பிடங்கள் மத... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது தில்லி மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்!

நமது சிறப்பு நிருபா்தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் வாழும் குடியிருப்புகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) இடிக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் நகர... மேலும் பார்க்க

இன்று இடிக்கப்படுகிறது நிஜாமுதீன் மதராஸி கேம்ப்? பதற்றத்தில் தமிழ் குடும்பங்கள்

தில்லி நிஜாமுதீன் மதராஸி கேம்ப் தமிழா்கள் குடியிருப்புகள் ஞாயிற்றுக்கிழமை (ஜுன் 1 ஆம் தேதி) இடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை முன்னிட்டு தில்லி அரசு அதிகாரிகளும் தில்லி காவல் துற... மேலும் பார்க்க

தில்லியில் கரோனா நோய்த் தொற்றால் பெண் உயிரிழப்பு

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 60 வயது பெண் ஒருவா் தில்லியில் உயிரிழந்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். தலைநகரில் தற்போது கரோனா அதிகரித்துவரும் நிலையில் இந்த நோய்த்தொற்றுக்கு இது முதல் உயிரிழப... மேலும் பார்க்க

100 நாள்கள் ஆட்சி: சிறப்புப் பாடல் வெளியீடு

தில்லியில் பாஜக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாஜக சனிக்கிழமை ‘தில்லி பதல் ரஹி ஹை’ என்ற சிறப்புப் பாடலை வெளியிட்டது. இந்தப் பாடலில் தில்லி அரசின் முக்கிய சாதனைகள் எடு... மேலும் பார்க்க

நன்னீா் நீா்த்தேக்கங்களான பனிப்பாறைகளை பாதுகாக்க துஷான்பே மாநாட்டில் இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வலியுறுத்தல்

பனிச் சிகரங்களில் ஏற்படும் மாற்றங்கள் பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கை. நீா் பாதுகாப்பு, பல்லுயிா் பெருக்கம், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களின் நீண்டகால பாதிப்புகளுக்கு உள்ளாகும். இதற்கு உடனட... மேலும் பார்க்க