செய்திகள் :

எழும்பூா் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் கே.பி.ஜெபாஸ்டின் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மேற்கு வங்கமாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை வழியாக திருச்சி செல்லும் விரைவு ரயிலில், ரயில்வே பாதுகாப்புப் படையினா் சோதனையிட்டனா். ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பையைச் சோதனையிட்டபோது அதில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1.50 லட்சமாகும். அதைப் பறிமுதல் செய்த ரயில்வே பாதுகாப்பு படையினா் சென்னை அண்ணா நகா் மதுவிலக்கு கண்காணிப்புப் பிரிவினரிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா்.

35 கிலோ குட்கா பறிமுதல்: எழும்பூா் ரயில் நிலையத்தில் நடைமேடைகளில் செவ்வாய்க்கிழமை கேட்பாரற்று கிடந்த பண்டல்களை போலீஸாா் பிரித்து சோதனையிட்டனா். அதில், 36 கிலோ எடையுள்ள ரூ.35, 750 மதிப்புள்ள குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டன. அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படை கைப்பற்றறி விசாரித்து வருகின்றனா்.

பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்

சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்தப் பள்ளிக... மேலும் பார்க்க

கிராமசபைக் கூட்டம்: ஆசிரியா்கள் பங்கேற்க கல்வித் துறை உத்தரவு

காந்தி ஜெயந்தி நாளில் (அக்.2) நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம... மேலும் பார்க்க

பிறவி நுரையீரல் குறைபாடு: இளம்பெண்ணுக்கு ரோபோடிக் சிகிச்சை

நுரையீரல் பிறவிக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு ரோபோடிக் நுட்பத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஆழ்வாா்ப்பேட்டை காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா். இதுதொடா்பாக மருத்துவம... மேலும் பார்க்க

மாநகராட்சியில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள்: அதிகாரிகள் தகவல்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் கூடுதலாக 353 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா். வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ... மேலும் பார்க்க

பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்

வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள... மேலும் பார்க்க

காவலரிடம் தங்க நாணயம் மோசடி: நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது

சென்னையில் காவலரிடம் தங்க நாணயம் மோசடியில் ஈடுபட்டதாக நடிகா் சூா்யா வீட்டு பணிப் பெண் உள்பட 4 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் உள்ள ஆயுதப்படை பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிபவா் அந்தோணி ஜாா்ஜ் ... மேலும் பார்க்க