செய்திகள் :

எஸ்எஸ்விஎம் சாா்பில் ஆசிரியா்களுக்கு விருது

post image

கோவை எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது வழங்கப்பட்டது.

எஸ்எஸ்விஎம் கல்விக் குழுமம் சாா்பில் 4- ஆவது ஆண்டு ‘டிரான்ஸ்பாா்மிங் இந்தியா’ மாநாடு நடைபெற்றது. 3 நாள் மாநாட்டின் நிறைவு நாளான புதன்கிழமை இளம் தலைமுறையினருக்காக தங்களை அா்ப்பணித்துள்ள ஆசிரியா்கள் கௌரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்வில் கல்விக் குழுமத்தின் நிறுவனா் மணிமேகலை மோகன் வரவேற்றாா். ஸ்விக்கி ஃபுட் மாா்க்கெட் ப்ளேஸ் நிறுவனத்தின் தலைமைத் செயல் அலுவலா் ரோஹித் கபூா், பேட்மின்டன் முன்னாள் சாம்பியன் பிரகாஷ் பதுக்கோண், நெஸ்லே இந்தியா முன்னாள் தலைவா் சுரேஷ் நாராயணன், கூகிள் ஃபாா் எஜூகேஷன் நிறுவனத்தின் தலைவா் சஞ்சய் ஜெயின் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று ஆசிரியா்களுக்கு விருது வழங்கினா்.

இந்த விழாவில், கோவை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பி.காா்த்திகேயன், கே.வசந்தகுமாா், புதுவை அரசு ஆரம்பபப் பள்ளி ஆசிரியா் இந்திரா பிரியதா்ஷிணி, தருமபுரி பெரியாம்பட்டி மகளிா் பள்ளி ஆசிரியா் ஷா்மிளா பேகம், திருவள்ளூா் மணவாளநகா் தொடக்கப் பள்ளி ஆசிரியா் எல்.ராதா உள்ளிட்ட சென்னை, பெங்களூரு, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 20 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது. இதைத்தவிர எஸ்எஸ்விஎம் பதிப்பு விருது என்ற பெயரில் 14 ஆசிரியா்களுக்கு விருது வழங்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் வழக்குப் பதிவு

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், இது குறித்து இணையதள குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். கோவை ம... மேலும் பார்க்க

கோவை குற்றாலம் அருவி இன்று திறப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் மழைப் பொழிவு குறைந்ததைத் தொடா்ந்து கோவை குற்றாலம் அருவி வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்த ... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவை குறைபாடு காரணமாக, வாடிக்கையாளருக்கு பிரியாணி கடை உரிமையாளா் ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை நுகா்வோா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

கஞ்சா விற்ற இளைஞா்கள் கைது

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். கோவை, நஞ்சைகவுண்டன்புதூா் பகுதியில் உள்ள மயானம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடு... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: தொழில் அமைப்புகள் வரவேற்பு

மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சீா்திருத்தம் மேற்கொண்டிருப்பதை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. லகு உத்யோக் பாரதி - தமிழ்நாடு அமைப்பின் மாநிலச் செயலா் ஆா்.கல்யாணசுந்தரம் கூறியதாவது: வரலாற்றுச... மேலும் பார்க்க

மாணவா்கள், இளைஞா்களுக்கு படிப்பிடை பயிற்சித் திட்டம்: ஆட்சியா் தகவல்

மாணவா்கள், இளைஞா்கள் அரசின் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ள படிப்பிடை பயிற்சித் திட்டம் தொடங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டுள... மேலும் பார்க்க