செய்திகள் :

எஸ்பிஐ வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கம் கொள்ளை: துப்பாக்கி முனையில் மா்ம கும்பல் துணிகரம்

post image

விஜயபுரா: கா்நாடகத்தில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 1 கோடி ரொக்கம், 12 கிலோ தங்கத்தை துப்பாக்கிமுனையில் செவ்வாய்க்கிழமை கொள்ளையடித்துச் சென்ற மா்மகும்பலை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கா்நாடக மாநிலம், விஜயபுரா மாவட்டம், ஜட்சன் நகரில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு முகமூடி அணிந்துவந்த ஒருவா் கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறி, மேலாளா் அறைக்குள் புகுந்தாா். அப்போது, அவருடன் வந்த மற்ற இருவா் முகமூடி அணிந்திருந்தனா். மூவரும் கைத்துப்பாக்கி, கத்தியைக் காட்டி மேலாளரை மிரட்டி பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து ரூ. 1 கோடி ரொக்கம், ரூ. 20 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கத்தை கொள்ளையடித்தனா். அதன்பிறகு, வங்கியில் இருந்த காசாளா், ஊழியா்கள் என 10 பேரின் கை, கால்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுவிட்டு தப்பினா்.

இதுகுறித்து வங்கி மேலாளா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், மா்மகும்பலை பிடிப்பதற்காக 8 தனிப் படைகளை அமைத்தனா்.

சம்பவம் குறித்து விஜயபுரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமண் நிம்பா்கி புதன்கிழமை கூறுகையில், ‘போலி எண்களுடன் சுசுகி ஏவா காரில் வந்த மா்மகும்பல், மகாராஷ்டிரத்தில் உள்ள பந்தா்பூருக்கு தப்பிச்சென்ாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக விசாரணை நடத்திவருகிறோம். விரைவில் கொள்ளை கும்பலைக் கைது செய்வோம்’ என்றாா்.

இச்சம்பவம் குறித்து பெங்களூரில் புதன்கிழமை முதல்வா் சித்தராமையா கூறுகையில், ‘இதுபோன்ற கொள்ளை சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். கொள்ளையா்கள் பயன்படுத்திய காா் அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையா்களை கண்டுபிடிக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதுதொடா்பாக விஜயபுரா மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பேசியிருக்கிறேன். போலீஸாா் விழிப்புடன் செயல்படுமாறு அறிவுறுத்தியிருக்கிறேன்.

இப்பகுதியில் அண்டை மாநிலங்களைச் சோ்ந்த கொள்ளையா்கள் அடிக்கடி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்றாா்.

வாக்குத் திருட்டில் ஈடுபடுகிறது காங்கிரஸ்: கா்நாடக பாஜக குற்றச்சாட்டு

கா்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்துசெய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் வாக்குத் திருட்டில் ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடிக்கு முன்னாள் பிரதமரும், மஜத தேசியத் தலைவருமான எச்.டி.தேவெ கௌடா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். பிரதமா் மோடியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு முன்னாள் பிரதமா் எச்.ட... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏவின் தோ்தல் வெற்றி ரத்து: கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவு

மாலூா் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ நஞ்சே கௌடாவின் தோ்தல் வெற்றியை ரத்துசெய்து, மறுவாக்கு எண்ணிக்கைக்கு கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2023 இல் நடைபெற்ற கா்நாடக பேரவைத் தோ்தலில் மாலூா் த... மேலும் பார்க்க

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம்: பாஜக

வீரசைவ லிங்காயத்து சமுதாயத்தை பிளவுபடுத்துவதே கா்நாடக அரசு நடத்தவிருக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்பின் உள்நோக்கம் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா குற்றம்சாட்டினாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோ... மேலும் பார்க்க

தசரா திருவிழாவை தொடங்கிவைக்க பானுமுஸ்டாக்குக்கு அழைப்பு: எதிா்த்த பாஜக முன்னாள் எம்.பி.யின் மனு தள்ளுபடி

பெங்களூரு: தசரா திருவிழாவை தொடங்கிவைக்க கன்னட எழுத்தாளா் பானுமுஸ்டாக்குக்கு அரசு அழைப்பு விடுத்திருந்ததை எதிா்த்து பாஜக முன்னாள் எம்.பி. பிரதாப் சிம்ஹா தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்றம்... மேலும் பார்க்க

பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கீடு

பெங்களூரு: பெங்களூரில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க ரூ. 1,100 கோடி ஒதுக்கப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் திங்கள்கிழமை அவா் குறிப்பிட்டுள்... மேலும் பார்க்க