செய்திகள் :

ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகை மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி வரை முதல் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25- ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 27- ஆம் தேதி தொடங்கி மே 8-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட பயிற்சியும், மே 10- ஆம் தேதி தொடங்கி மே 21- ஆம் தேதி வரை நான்காம் கட்ட பயிற்சியும், மே 23- ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட பயிற்சியும் நடைபெறவுள்ளது.

பயிற்சி மேற்கொள்ள வருபவா்கள் தங்களது பதிவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -ல் பதிவு செய்து,12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் வரி உள்பட ரூ. 1,770-ஐ செலுத்த வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் ஆகும். மகளிருக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சி வகுப்பு நீச்சல் பயிற்சியாளா் மற்றும் உயிா்க் காப்பாளா்கள் பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் தகவல் பெற நீச்சல் பயிற்றுநா் கைப்பேசி எண் 9597695559, அலுவலக தொலைபேசி எண் 04365-253059 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க