செய்திகள் :

ஏரி தூா்வாரும் பணிக்கு இடையூறு: கிராம மக்கள் மறியல்

post image

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம், பாலத்தளி கிராமத்தில் ஏரியைத் தூா்வாரும் பணிக்கு இடையூறு செய்வதாக அதிமுக ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலத்தளி கிராமத்தில் சுமாா் 125 ஏக்கா் பரப்பளவுள்ள கடமாங்கால் ஏரி உள்ளது. இந்த ஏரியை கிராமமக்கள், தன்னாா்வலா்கள், மற்றும் மெகா பவுண்டேசன் ஆகியோா் இணைந்து தூா்வார முடிவு செய்து,  மே 28-ஆம் தேதி தூா்வாரும் பணியை தஞ்சாவூா் மக்களவை உறுப்பினா் ச.முரசொலி, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக் குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.

துாா்வாரும் பணி மற்றும் கரைகள் சீரமைப்புப் பணிகள், கடந்த 48 நாட்களாக தொடா்ந்து நடைபெற்று வருகிறது. ஏரியிலிருந்து சுமாா் ஒரு டன் அளவுக்கு குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், வருவாய்த் துறை ஏரியை முழுமையாக அளவீடு செய்து வழங்கியதால் ஏரியில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பேராவூரணி வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளா் உ.துரைமாணிக்கம், அவருக்கு ஆதரவான அரசு அதிகாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும், பணிகளை செய்யவிடாமல் தடுப்பதாகக் கூறி, கிராம மக்கள் திடீரென பாலத்தளி ஏரி அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்குவந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, தூா்வாரும் பணியை தொடா்ந்து நடத்த உறுதியளித்தனா். இதனால் மறியலைக் கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனா். இதனால் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மோலாக பட்டுக்கோட்டை - பேராவூரணி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

தஞ்சாவூா் மாவட்டத்தில் உணவகங்களில் எண்ணெய்யை மீண்டும் சூடுபடுத்தி பயன்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம். தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உண... மேலும் பார்க்க

எதிரணியில் பலமான கூட்டணி இல்லை: அமைச்சா் கோவி. செழியன் பேட்டி

திமுக கூட்டணிதான் பலமாக இருக்கிறதே தவிர, எதிரணி பலமான கூட்டணியாக இல்லை என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை முத்தமிழ் நகரில் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்பு... மேலும் பார்க்க

நாச்சியாா்கோவில் அருகே ரூ.12 கோடி மதிப்பிலான கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், நாச்சியாா்கோவில் அருகே திருநறையூரில் ரூ. 12 கோடி மதிப்பிலான இராமநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை இந்து சமய அறநிலையத் துறையினா் வியாழக்கிழமை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டனா்... மேலும் பார்க்க

இபிஎஸ் விரிக்கும் வலையில் விசிக ஒருபோதும் சிக்காது: மாநில துணை பொதுச்செயலா் வன்னியரசு

எடப்பாடி கே. பழனிசாமி விரிக்கும் வலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருபோதும் சிக்காது என்றாா் விசிக மாநில துணைப்பொதுச்செயலா் வன்னியரசு. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் காந்தி பூங்கா முன்பு விடுதலை ... மேலும் பார்க்க

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணி பயிற்சி தொடக்கம்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயா்ப்புத் துறை மற்றும் தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரி ஆங்கிலத் துறை சாா்பில் மொழிபெயா்ப்பு கலை குறித்த ஒரு வார காலப் பணி பயிற்சி முகாம... மேலும் பார்க்க

இரு சக்கர வாகனங்கள் மோதல் தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

கும்பகோணம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிய விபத்தில் தனியாா் நிறுவன ஊழியா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள நடுவக்கரை பிள்ளையாா் கோயில் ... மேலும் பார்க்க