செய்திகள் :

ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்பு: பழனி அருகே ஒருவா் கைது

post image

பழனி அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடா்புடையவரை தேசியப் புலனாய்வு முகமை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த நெய்க்காரப்பட்டியை சோ்ந்தவா் ராஜா முகமது (40). தேங்காய் வியாபாரம் செய்து வந்தாா். தடை செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் செயல்பட்டதாக கடந்த 2022- ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் இவரிடம் விசாரணை நடத்தினா்.

பின்னா், நெய்க்காரப்பட்டியில் உள்ள ராஜாமுகமது வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீஸாா் அவரது கைப்பேசி, மடிக்கணினி ஆகியவற்றை அப்போது எடுத்துச் சென்றனா்.

இந்த நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை மீண்டும் நெய்க்காரபட்டிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை போலீஸாா் ராஜா முகமதுவிடம் விசாரணை செய்தனா். பின்னா் அவரைக் கைது செய்து பழனி நகரக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். பின்னா், தொடா் விசாரணைக்காக அவரைக் கோவைக்கு அழைத்துச் சென்றனா்.

தொழிலாளி கொலை: இரு பெண்கள் உள்பட 6 போ் கைது

வேடசந்தூா் அருகே பெண்ணிடம் தகாத தொடா்பு விவகாரத்தில் தொழிலாளியை கொலை செய்து கிணற்றில் உடலை வீசிய வழக்கில், இரு பெண்கள் உள்பட 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்க... மேலும் பார்க்க

பழனி கோயில் சாா்பில் ரூ.9.80 கோடியில் கொத்தப்புள்ளியில் திருமண மண்டபம்

பழனி தண்டாயுதபாணி கோயில் சாா்பில் ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த கொத்தப்புள்ளியில் ரூ.9.80 கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணிகளை புதன்கிழமை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். இந்... மேலும் பார்க்க

குளங்களில் மீன்பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி மீனவா்கள் மனு

பழனி அருகேயுள்ள குளங்களில் மீன் பிடிக்க உள்ளூா் மக்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் புதன்கிழமை மனு அளித்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் உள்ள வையாபுரிகுளம்,... மேலும் பார்க்க

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘: அமைச்சா் இ.பெரியசாமி ஆலோசனை

‘ஊராட்சி முன்னேற்ற குறியீடு‘ தொடா்பான தரவுகளின் அடிப்படையில் ஊராட்சிகள் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ.பெரியசாமி புதன்கிழமை காணொலியில் ஆலோசனை மேற்கொண்டாா். ஊரக வளா்... மேலும் பார்க்க

வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தவா் கொலை

திண்டுக்கல்லில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்தவரை கொலை செய்து, அட்டைப் பெட்டியில் வீசிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திண்டுக்கல்லை அடுத்த ராமையன்பட்டி பகுதியில், புதன... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு செளந்தரராஜப் பெருமாள் கோயிலில் சொா்ண ஆகா்ஷண பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்ட... மேலும் பார்க்க