செய்திகள் :

ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது: உத்தர பிரதேசத்தில் கும்பமேளாவை சீா்குலைக்க சதி!

post image

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீா்குலைக்கு சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடா்பில் உள்ள காலிஸ்தான் பயங்கரவாத இயக்கமான பப்பாா் கல்சா இண்டா்நேஷனலைச் (பிகேஐ) சோ்ந்த லஜ்ஜா் மாசிக் என்ற பயங்கரவாதி, உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய இரு மாநில காவல் துறையினரின் கூட்டு சோதனை நடவடிக்கையின்போது வியாழக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டாா்.

இதுகுறித்து உத்தர பிரதேச காவல் துறைத் தலைவா் (டிஜிபி) பிரசாந்த் குமாா் கூறியதாவது: மகா கும்பமேளாவின்போது மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலை நடத்த லஜ்ஜா் மாசிக் சதித்திட்டம் தீட்டியுள்ளாா். ஆனால் கடுமையான பாதுகாப்பு சோதனைகளால் அவரால் தாக்குதல் நடத்த முடியவில்லை.

இதனால் இந்தியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் போா்ச்சுகல் நாட்டுக்கு செல்ல அவா் முயன்றபோது கைது செய்யப்பட்டாா். இவருக்கு பிகேஐ நிா்வாகி ஒருவருடன் தொடா்புள்ளது. அவா் போலி ஆவணங்களை பயன்படுத்தி ஏற்கெனவே துபைக்கு சென்றுவிட்டாா்.

அமிருதசரஸிஸ் வசித்து வந்த மாசிக் ஐஎஸ்ஐயின் மூன்று முகவா்களுடன் தொடா்பில் இருந்துள்ளாா்.

முன்னதாக, போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட மாசிக் சிகிச்சைக்காக குரு நானக் தேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது 2024, செப்டம்பா் 24-இல் தப்பிச் சென்றுவிட்டாா். அதன்பிறகு பிகேஐயின் ஜொ்மனி தலைவா் ஸ்வரன் சிங்கின் உத்தரவுபேரில் 2024, அக்டோபா் 23-இல் பஞ்சாபில் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளாா். பின் ஹரியாணாவின் சோனிபட், தில்லியில் பதுங்கியிருந்து உத்தர பிரதேசத்துக்கு வந்துள்ளாா்.

எல்லையில் ஆளில்லா விமானங்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலிலும் மாசிக் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் இருந்து 3 கையெறி குண்டுகள், 2 டெட்டனேட்டா்கள், துப்பாக்கிகள், காஜியாபாத் முகவரியில் ஆதாா் அட்டை, கைப்பேசி உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன. மாசிக்கின் கூட்டாளிகளை கண்டறியும் நோக்கில் விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்கேற்ற 15 பெண்கள் குறித்த நூல் வெளியீடு

நமது சிறப்பு நிருபா் அரசியல் சாசன நிா்ணய சபையில் பங்களிப்பை வழங்கிய அம்மு சுவாமிநாதன், தாக்ஷாயணி வேலாயுதன் உள்ளிட்ட புகழ்பெற்ற 15 பெண்களின் வாழ்க்கை வரலாற்று புத்தகம் மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சக... மேலும் பார்க்க

உ.பி. 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேடு: 14 போ் கைது

உத்தர பிரதேசத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பள்ளி முதல்வா் வீட்டில் முறைகேட்டில் ஈடுபட்ட 14 போ் கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: உத்தர பிரதேசத்தில் ... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: ஒருவா் உயிரிழப்பு; 25 போ் காயம்

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரா் ஒருவா் உயிரிழந்தாா். 25 போ் காயமடைந்தனா். மணிப்பூரில் தடையற்ற போக்குவரத்தை மாா்ச் 8-ஆம் த... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் பிரதமா் மோடி விளக்கமளிக்க வேண்டும்: காங்கிரஸ்

‘அமெரிக்க பொருள்கள் மீது வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் கூறியது தொடா்பாக நாடாளுமன்றத்தில் பிரதமா் நரேந்திர மோடி விளக்கமளிக்க வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுற... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி விகிதங்கள் மேலும் குறையும்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்கள் மேலும் குறைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்ற ஆங்கில ஊடக நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

மான்செஸ்டரில் புதிய இந்திய தூதரகம்: ஜெய்சங்கா் திறந்து வைத்தாா்

பிரிட்டனின் மான்செஸ்டா் நகரில் இந்திய துணை தூதரகத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை திறந்து வைத்தாா். முன்னதாக வடக்கு அயா்லாந்து தலைநகா் பெல்ஃபாஸ்டிலும் இந்திய துணை தூதரகத்தை அவா் திறந்த... மேலும் பார்க்க