செய்திகள் :

ஐசிசி தரவரிசை: பந்து வீச்சாளர்களில் முதலிடம் பிடித்த மகீஷ் தீக்சனா!

post image

ஐசிசி ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இலங்கை வீரர் மகீஷ் தீக்சனா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் இன்று(பிப்.19) தொடங்கியது. இந்தியாவுக்கான போட்டி நாளை துபையில் நடைபெறவுள்ளது.

இந்தத் தொடருக்கு முன்னதாக, இந்தியா- இங்கிலாந்து தொடர், நியூசிலாந்து - பாகிஸ்தான் - தென்னாப்பிரிக்கா முத்தரப்பு தொடர், இலங்கை - ஆஸ்திரேலியா தொடர் ஆகியவை நடைபெற்று முடிந்துள்ளன. இதற்கான ஒருநாள் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க...ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்த ஷுப்மன் கில்..! டாப் 10இல் 4 இந்தியர்கள்!

பேட்டிங் தரவரிசையில் இந்திய வீரர் ஷுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவர் மட்டுமின்றி ரோஹித் சர்மா - 761 புள்ளிகள் , விராட் கோலி - 721 புள்ளிகள், ஸ்ரேயாஸ் ஐயர் - 679 புள்ளிகள் உள்ளிட்டோரும் புள்ளிப் பட்டியலில் முதல் பத்து இடங்களைப் பிடித்து அசத்தியுள்ளனர்.

பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 போட்டிகளில் 4 விக்கெட்டை வீழ்த்திய மகீஷ் தீக்சனா ஆப்கனின் ரஷீத்கானைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார்.

முதல் 10 இடங்களைப் பிடித்த பந்து வீச்சாளர்கள்

  1. மகீஷ் தீக்சனா-680 புள்ளிகள்

  2. ரஷீத்கான்-669 புள்ளிகள்

  3. பெர்னார்ட் ஸ்கால்ட்ஸ்-662 புள்ளிகள்

  4. குல்தீப் யாதவ்-652 புள்ளிகள்

  5. ஷாகீன் அப்ரிடி-646 புள்ளிகள்

  6. கேஷவ் மகராஜ்-642 புள்ளிகள்

  7. மிட்செல் சாண்ட்னர்-639 புள்ளிகள்

  8. மேட் ஹென்றி-632 புள்ளிகள்

  9. குடகேஷ் மோட்டி-632 புள்ளிகள்

  10. முகமது சிராஜ்-624 புள்ளிகள்

இதையும் படிக்க...கவுன்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடும் ஷர்துல்!

சாம்பியன்ஸ் டிராபி: ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கனை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ... மேலும் பார்க்க

எல்லீஸ் பெர்ரி விளாசல்: மும்பை அணிக்கு 168 ரன்கள் இலக்கு!

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. 3-வது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் முதல் கட்ட ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் பெங்களூ... மேலும் பார்க்க

அணியில் பிரதான பந்துவீச்சாளர்கள் இல்லை, ஆனால்... ஸ்டீவ் ஸ்மித் கூறுவதென்ன?

ஆஸ்திரேலிய அணியின் பிரதான வேகப் பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவுள்ளது குறித்து அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பேசியுள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இல்லை: பாக். முன்னாள் வீரர்

பாகிஸ்தானைக் காட்டிலும் இந்திய அணியில் அதிக அளவிலான போட்டியை வென்று கொடுக்கும் வீரர்கள் இருப்பதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஷகித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் துப... மேலும் பார்க்க

இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கான அழுத்தத்தில் இருக்கிறோமா? பாக். வீரர் பதில்!

மற்ற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போன்றே இந்தியாவுக்கு எதிரான போட்டியையும் பார்ப்பதாக பாகிஸ்தான் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌஃப் தெரிவித்துள்ளார்.வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்க... மேலும் பார்க்க

மனைவியைப் பிரிந்தார் சஹால்..! ரூ.60 கோடி ஜீவனாம்சம் கேட்டாரா தனஸ்ரீ வர்மா?

இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவி தனஸ்ரீ வர்மா இருவரும் பரஸ்பர முறையில் விவகாரத்து பெற்று பிரிவதாக முடிவெடுத்துள்ளனர். இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர... மேலும் பார்க்க