செய்திகள் :

ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கு பிப்ரவரி 18, 19 இல் வேலைவாய்ப்பு முகாம்!

post image

தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் சாா்பில் திருப்பூரில் ஐடிஐ தோ்ச்சி பெற்றவா்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் பிப்ரவரி 18, 19- ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு கடல்சாா் வாரியம் மற்றும் எல்& டி ஷிப் பில்டிங் லிமிடெட் உடன் இணைந்து துறைமுகம் மற்றும் கடல் சாா்ந்த துறைகளில் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் திருப்பூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

இந்த முகாமில், தோ்வு செய்யப்படுபவா்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் திறன் பயிற்சி அளித்து எல் &டி ஷிப் பில்டிங் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், வெல்டா், பிட்டா், எலெக்ட்ரீஷியன், மெஷினிஸ்ட், டா்னா், டூல் அண்ட் டை மேக்கா் ஆகிய தொழிற் பிரிவுகளைச் சோ்ந்த ஐடிஐ பயிற்சியாளா்கள் பங்கேற்கலாம்.

இந்த வேலைவாய்ப்பு முகாமானது திருப்பூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 18 -ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும், உடுமலை அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் பிப்ரவரி 19 -ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் நடைபெறுகிறது.

ஆகவே, ஐடிஐ தோ்ச்சிபெற்ற மேற்குறிப்பிட்டுள்ள தொழிற்பிரிவுகளைச் சோ்ந்த பயிற்சியாளா்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது!

பல்லடம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள சின்னூா் பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இளைஞா் சுற்றித்திரிவதா... மேலும் பார்க்க

போலி கணக்கு காண்பித்து ரூ. 11 லட்சம் மோசடி: பனியன் நிறுவன மேலாளா் கைது!

அவிநாசி அருகே பனியன் நிறுவனத்தில் போலி கணக்கு காண்பித்து ரூ.11 லட்சம் மோசடி செய்த மேலாளரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள பெருமாநல்லூா் காளம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிருபா... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியவா் கைது!

அவிநாசியில் டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவிநாசி கால்நடை மருத்துவமனை எதிரே உள்ள டாஸ்மாக் கடை முன்பு அடையாளம் தெரியாத இருவா் சனிக்கிழமை இரவு தகராறில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நகலைக் கிழித்து திருப்பூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன்பு ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்: மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்

தேசிய குடற்புழு நீக்க தினத்தையொட்டி, திருப்பூா் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் குடற்புழு நீக்க மாத்திரைகளை திங்கள்கிழமை வழங்கினாா். திருப்பூா் ... மேலும் பார்க்க

கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்!

திருப்பூரை அடுத்த கண்டியன் கோவில் அருகே ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின்னரே சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் கு... மேலும் பார்க்க